காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் காலமானார்…!

Default Image

காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் சையது அலி ஷா கிலானி காலமானார்.

காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் சையது அலி ஷா கிலானி அவர்கள்,  பல ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், இன்று காலை அவரது இல்லத்தில் கிலானியின் உயிர் பிரிந்துள்ளது.

இவரது மறைவுக்கு, ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முஃப்தி இரங்கல் தெரிவித்துள்ளார். கிலானி தடை செய்யப்பட்ட ஜமாத்-ஏ-இஸ்லாமி அமைப்பின் உறுப்பினராக இருந்தார். பின் பிரிவினைவாத சார்பு கட்சிகளின் கூட்டமைப்பான தெஹ்ரீக்-ஏ-ஹூரியத் அமைப்பை நிறுவினார். அதனை தொடர்ந்து,  அனைத்துக் கட்சி ஹூரியத் மாநாடு அமைப்பின் தலைவராகப் பணியாற்றிய நிலையில்,  2020-இல் அப்பொறுப்பிலிருந்து விலகினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்