வெற்றிகரமாக திறக்கப்பட்டது…. காஷ்மீர் பள்ளிகள்… மகிழ்ச்சியுடன் பள்ளி புறப்பட்ட மாணவர்கள்…

Published by
Kaliraj
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்க்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 5-ம் தேதி மத்திய அரசு ரத்து செய்தது. மேலும், அப்பகுதியை ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து மத்திய அரசின் நேரடி கட்டுப்பட்டின் கீழ் கொண்டுவந்தது.  இந்த நடவடிக்கையின் காரணமாக பாதுகாப்பு கருதி அரசியல் தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.மேலும் அங்கும்,  இணையதளம் உள்ளிட்ட தொலைதொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டன. மேலும், ஜம்மு-காஷ்மீரில் செயல்பட்டுவந்த அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன. இந்நிலையில் அங்கு நிலைமை தற்போது சீரடைந்துள்ளதையடுத்து மூடப்பட்ட பள்ளிகளை பள்ளிகளை திறக்க யூனியன்பிரதேச நிர்வாகம் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து மேற்கொண்ட முயற்சிகள் மேற்கொண்டன. ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்கான தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் முன்வராததாலும், குளிர்கால விடுமுறை காரணமாகவும் பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டிருந்தன. இந்நிலையில் காஷ்மீரில் திங்கட்கிழமை (நேற்று) முதல் பள்ளிகள் திறக்கப்படும் என யூனியன் பிரதேச கல்வித்துறை இயக்குனர் முகம்மது யானூஸ் மாலிக் தெரிவித்துள்ளார். மேலும், பாதுகாப்பு ஏற்பாடுகள் விரிவாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், பெற்றோர் தங்கள் குழந்தைகளை எந்தவித தயக்கமும் இன்றி பள்ளிகளுக்கு அனுப்பலாம் என்றும்  அவர் தெரிவித்திருந்தார். இதையடுத்து 7 மாதங்களுக்கு பிறகு நேற்று காஷ்மீரில் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டன. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு மகிழ்ச்சியாக அனுப்பிவைத்தனர்.  மாணவ-மாணவிகளும் ஆர்வமுடன் பள்ளிகளுக்கு அதிக எண்ணிக்கையில் வந்தனர்.

Recent Posts

ஆளுநர் நடத்தும் மாநாடு : அரசு & தனியார் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் புறக்கணிப்பு.!

ஆளுநர் நடத்தும் மாநாடு : அரசு & தனியார் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் புறக்கணிப்பு.!

உதகை : மாநில, மத்திய, தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு உதகையில் இன்று நடக்கிறது. உதகை ராஜ்பவனில் நடக்கும் இந்த…

48 minutes ago

TNPSC குரூப் 4 தேர்வு நாள் அறிவிப்பு! எப்போது தேர்வு.? எத்தனை பணியிடங்கள்.?

சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, …

1 hour ago

எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு.., பதிலடி கொடுக்கும் இந்தியா.!

காஷ்மீர் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு மூன்று நாட்களுக்குப் பிறகு, காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே இன்று பாகிஸ்தான்…

2 hours ago

RCB vs RR : சொந்த மைதானத்தில் பெங்களூருவின் முதல் வெற்றி! போராடி தோற்ற ராஜஸ்தான்!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

13 hours ago

இனி இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் கிடையாது! பிசிசிஐ அதிரடி முடிவு!

டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…

13 hours ago

RCB vs RR : விராட் கோலி அதிரடி ஆட்டம்! ராஜஸ்தான் வெற்றிக்கு 206 ரன்கள் இலக்கு!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

15 hours ago