காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இந்த மசோதா நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த மசோதா மீதான விவாதம் இன்று முழுவதும் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.
இந்த விவகாரத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா விவாதம் தொடர்பாக விளக்கம் அளித்தார். அவர் கூறுகையில், ‘ 370 சட்டப்பிரிவு மற்றும் 35ஏ மூலம் காஷ்மீரில் ஜனநாயகம் முழுமையாக நிலைநாட்டப்படவில்லை, மேலும் அங்கு வாழும் மக்களுக்கு வளர்ச்சியும் ஏற்படவில்லை. இந்த சிறப்பு அந்தஸ்தை சில அரசியல்வாதிகளும், பணக்கார குடும்பங்களும் மட்டுமே பயன் பெற்றுள்ளனர்.’ என்றும்,
மேலும், ‘ தமிழகம் , ஆந்திரா போன்ற மாநிலங்கள் பிரிவு 370 இல்லாமலும், மொழி மற்றும் கலாச்சாரத்தை பேணி பாதுகாத்து வருகின்றனர்.’ என தெரிவித்தார். மேலும் ‘காஷ்மீருக்கு யூனியன் பிரதேச அந்தஸ்து தாற்காலிகமானது தான் என்று தெரிவித்தார்.காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பிய பின்னர் அதற்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும்.’ என்றும் தெரிவித்தார்.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…
சென்னை : இந்த வருட ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரசிகர்களுக்கும் சோகமான சீசனாகவே அமைந்து வருகிறது.…
கேரளா : ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து, அதன் ஒவ்வொரு அப்டேட்டையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். தற்போது,…