ஐ.நாவில் காஷ்மீர் குறித்து இம்ரான்…. ஆக்கிரமிப்பு காஷ்மீரை விட்டு உடனே வெளியே போ என இந்தியா பதில்…

Published by
Kaliraj

ஐ.நா.வின் 75-வது ஆண்டு பொதுசபை கூட்டத்தில் உலக நாடுகளின் தலைவர்கள் உரையாற்றி வருகின்றனர். இதில் நேற்று முன்தினம் மெய்நிகர் முறையில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், காஷ்மீர் விவகாரத்தை எழுப்பி இந்தியா மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறினார். மேலும் காஷ்மீர் மீது கடந்த ஆண்டு ஆகஸ்டு 5-ந்தேதி மேற்கொண்ட சட்ட நடவடிக்கையை (சிறப்பு அந்தஸ்து நீக்கம்) ரத்து செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

இந்த  குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் உரிமையின் கீழ் இந்தியா அறிக்கை ஒன்றை பொதுசபை அரங்கில் வெளியிட்டது. இதனை, செயலாளரான மிஜிட்டோ வினிட்டோ வாசித்தார். அதில், தன்னைப்பற்றியோ, தனது சாதனையை பற்றியோ, உலகுக்கு நியாயமான பரிந்துரையோ கூற எதுவும் இல்லாத ஒருவரின் (இம்ரான்கான்) இடைவிடாத கொந்தளிப்பை ஐக்கிய நாடுகள் பொதுசபை கேட்டது. வெறும் பொய்கள், தவறான தகவல்கள், போரை தூண்டும் வார்த்தைகளை அதில் நாம் பார்தோம். இதன் மூலம் ஐக்கிய நாடுகளின் சாரத்தையே அவர் இழிவுபடுத்தியுள்ளார். காஷ்மீர் விவகாரத்தில் ஒரேயொரு சர்ச்சைதான் இருக்கிறது, அது பாகிஸ்தானின் சட்டவிரோத ஆக்கிரமிப்பு மட்டும்தான். ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் சட்ட விரோதமாக ஆக்கிரமித்துள்ள (ஆக்கிரமிப்பு காஷ்மீர்) ஒட்டுமொத்த பகுதிகளில் இருந்தும் பாகிஸ்தான் வெளியேற வேண்டும்.

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் மாற்ற முடியாத பகுதியாகும். அங்கு எடுக்கப்படும்  சட்ட நடவடிக்கைகள் அனைத்தும்  கண்டிப்பாக இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் ஆகும். ஐக்கிய நாடுகள் சபையில் இன்று விஷம் உமிழ்ந்த இதே தலைவர்தான் கடந்த ஆண்டு, தங்கள் நாட்டில் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரையிலான பயங்கரவாதிகள் இருப்பதாகவும், பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற அவர்கள் ஆப்கானிஸ்தான் மற்றும் இந்திய யூனியன் பிரதேசமான காஷ்மீரில் போராடுவதற்காக காத்திருக்கிறார்கள் எனவும் பொதுவெளியில் ஒப்புக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.  இவ்வாறு இந்தியா தனது அறிக்கையில் கூறியிருந்தது. இதற்கு, முன்னதாக பாகிஸ்தான் பிரதமர் உரை நிகழ்த்தும்போது மிஜிட்டோ வினிட்டோ, ஐக்கிய நாடுகள் பொது அவையை விட்டு அவர் வெளிநடப்பு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Published by
Kaliraj

Recent Posts

”பஹல்காம் தாக்குதலுக்கு தங்களுக்கும் தொடர்பில்லை” – பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்.!

”பஹல்காம் தாக்குதலுக்கு தங்களுக்கும் தொடர்பில்லை” – பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்.!

நாட்டையே உலுக்கிய ஜம்மு-காஷ்மீர் பாஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கர பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஒரு நாள் கழித்து, பாகிஸ்தான்…

10 minutes ago

பாஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த 26 பேரின் விவரங்கள்.!

ஸ்ரீநகர் : இந்தியர்களுக்கு மற்றுமொரு கருப்பு நாளாக காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் அமைந்திருக்கிறது. ஆம், நேற்றைய தினம் ஜம்மு…

1 hour ago

பதுங்கியிருக்கும் பயங்கரவாதிகள்? விமானம் மூலம் தேடுதல் வேட்டையில் இந்திய ரானுவம்!

ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் இதுவரை வெளியான தகவலின்…

2 hours ago

Live : ஜம்மு காஷ்மீர் தாக்குதல் முதல்…அரசியல் நிகழ்வுகள் வரை!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் இதுவரை வெளியான தகவலின்…

2 hours ago

தேனிலவு கொண்டாட வந்த கடற்படை அதிகாரி..சுட்டுக்கொன்ற பயங்கரவாதிகள்…இதயத்தை நொறுக்கும் புகைப்படம்!

ஸ்ரீநகர் :  ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்தத் தாக்குதலில், திருமணமாகி வெறும் மூன்று…

2 hours ago

PahalgamAttack : ஜம்மு காஷ்மீர் தாக்குதல்…மனதை உலுக்கும் காட்சிகள்!

ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் நேற்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பராபரையும்…

3 hours ago