ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையில் காஷ்மீர் பிரச்னை குறித்து துருக்கியின் அதிபர் எர்டோகன் பேசியது முழுமையாக ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல’ என்று இந்தியா கடுமையாக கண்டித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக, ஐக்கிய நாடுகள் சபையின் 75 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக பொதுச்சபை கூட்டத்தில் உலகத் தலைவர்கள் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அவர்களின் உரை, வீடியோவாக பதிவு செய்யப்பட்டு, மாநாட்டில் வெளியிடப்பட்டு வருகிறது. இந்திய பிரதமர் மோடியின் உரை நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இந்நிலையில், கடந்த செவ்வாய்கிழமை, துருக்கி அதிபர் ரிசெப் தயீப் எர்டோகனின் பேச்சு வெளியிடப்பட்டது.அதில் பேசிய எர்டோகன், “தெற்காசியாவின் அமைதிக்கு முக்கிய காரணியாக இருக்கும் காஷ்மீர் பிரச்னை, தற்போதும் முக்கிய பிரச்னையாக மாறி உள்ளது. குறிப்பாக, காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, இந்த பிரச்னை மிகவும் சிக்கலாகி விட்டது. ஐக்கிய நாடுகளின் தீர்மானங்களுக்கு உட்பட்டு, பேச்சுவார்த்தையின் மூலம் இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்,’’ என்றார். துருக்கி அதிபரின் இந்த பொறுப்பற்ற பேச்சிற்கு இந்தியாவுக்கான ஐநா.வின் நிரந்தர தூதர் திருமூர்த்தி நேற்று தனது டிவிட்டர் பதிவில் கடும் கண்டனம் தெரிவித்தார். `இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் துருக்கி தலையிடுவது, முழுமையாக ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல. பிற நாடுகளின் இறையாண்மையை மதிக்க, துருக்கி முதலில் கற்று கொள்ள வேண்டும். துருக்கி முதலில் தனது நாட்டின் கொள்கைகளில் கவனம் செலுத்துவது நல்லது,’ என்று பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னை : அத்திக்கடவு-அவிநாசி 17 ஆகஸ்ட் 2024 அன்று நிறைவேற்றுப்பட்டது. இந்தத் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி…
சென்னை : காதலர் தினமான வருகின்ற பிப்ரவரி 14 அன்று தமிழ் சினிமாவில் இருந்து ஒத்த ஓட்டு முத்தையா, 2கே…
குஜராத் : இந்தியா - இங்கிலாந்து இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி, இன்று அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்துக்கு எதிரான…
திருவண்ணாமலை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதன் உட்கட்டமைப்பை மறுசீரமைக்கும் வகையில்…
அகமதாபாத் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி…
அகமதாபாத் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கும் முன்னதாக இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள்…