Categories: இந்தியா

காஷ்மீர் தாக்குதல்: மேலும் 4 தீவிரவாதிகள் வரைபடங்கள் வெளியீடு!

Published by
அகில் R

காஷ்மீர் தாக்குதல்: ஜம்மு-காஷ்மீர் நடந்த 2 பயங்ரவாத தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளின் மாதிரி தோற்ற படங்களை போலீஸார் வெளியிட்டுள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஷிவ் கோரி கேத்ராவில் உள்ள மாதா வைஷ்ணோ தேவி கோவிலுக்கு வழிபட சென்ற பக்தர்களை ஏற்றிச்சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் தூப்பாக்கிச் சூடு நடத்தினார். இந்த தாக்குதலில் 9 பேர் உயிரிழந்ததுடன், 41 பேர் காயமடைந்தனர். அதன்பின், செவ்வாய்க்கிழமை அன்று பதேர்வாவின் சட்டர்கல்லாவில் உள்ள 4 ராஷ்ட்ரிய ரைஃபில் மற்றும் போலீஸ் கூட்டுச் சோதனைச் சாவடி மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள்.

மேலும், இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு படையிருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடத்தது. இந்த பயங்கர தாக்குதலில் ஒரு காவல் அதிகாரி உட்பட 7 பாதுகாப்பு படையினர் பலத்த காயமடைந்தனர். அதனை தொடர்ந்து, இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 9 பேர் உறவினர்களுக்கு தலா ரூ.10 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 நிவாரணத் தொகையாக அறிவித்தார் ஜம்மு-காஷ்மீர் லெப்டினன்ட் கவர்னர்.

மேலும், இந்த தாக்குதலில் ஈடுபட்ட ஒரு தீவிரவாதியின் மாதிரி வரைபடத்தை வெளியிட்டு, அந்த பயங்கரவாதியை குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.20 லட்சம் பரிசாக வழங்கப்படும் என்று அறிவித்தனர். இந்நிலையில் தற்போது நேரில் கண்ட சாட்சிகளை கருத்தில் கொண்டு மாதிரி வரைபடம் வரைந்து 4 பயங்கர வாதிகளின் படங்களை போலீஸார் வெளியிட்டுள்ளனர்.

இந்தத் தீவிரவாதிகளின் இருப்பு மற்றும் நடமாட்டம் பற்றிய தகவல் தெரிந்தால் அதனைத் தெரிவிக்குமாறு பொதுமக்களுக்கு போலீஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Published by
அகில் R

Recent Posts

ENGvsAUS : “நான் நினைத்தபடி திரும்பி வந்திருக்கிறேன்”! ஜோப்ரா ஆர்ச்சர் நெகிழ்ச்சி பேட்டி..!

லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…

24 mins ago

ENGvsAUS : “அவரிடமிருந்து இங்கிலாந்து அதை தான் எதிர்பார்க்கிறது”! ஸ்டூவர்ட் பிரோட் பெருமிதம்!

சென்னை : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கே இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நேற்று 4-வது போட்டியானது நடைபெற்றது.…

46 mins ago

தமிழக மீனவர்களை விடுவிக்க அமைச்சர் ஜெய்சங்கருக்கு ராகுல் காந்தி கடிதம்.!

டெல்லி : இலங்கையில் புதிய ஆட்சி அமைந்த பின் இலங்கை கடற்படையினரின் ரோந்து அதிகரித்திருப்பதாக தமிழக மீனவர்கள் புகார்கள் அதிகரித்துள்ளது.…

1 hour ago

தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டல்.? நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு.!

பெங்களூரு : தேர்தல் பத்திரங்கள் மூலம் பிரதான அரசியல் கட்சிகள் தேர்தல் நிதி (நன்கொடை) பெற்றுக்கொள்ளலாம் என்ற விதிமுறையை கடந்த…

1 hour ago

SLVsNZ : சாதனைப் படைத்த கமிந்து! இலங்கை சுழலில் சிக்கி திணறும் நியூசிலாந்து!

காலி : நியூஸிலாந்து அணி இலங்கை அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகள் அடங்கிய சுற்றுப்பயணத் தொடரை விளையாடி வருகிறது. இந்த…

2 hours ago

“வாட்ஸ்அப் கூட யூஸ் பண்ண முடியல”…ஆர்த்தியின் கொடுமைகள்? கண்கலங்கிய ஜெயம் ரவி!!

சென்னை : ஜெயம் ரவி தன்னுடைய மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாகக் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்து இருந்தார்.…

2 hours ago