காஷ்மீர் : பயங்கரவாதிகளுக்கு உதவிய 25 பேர் கைது …!

Default Image

காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு உதவியதாக 25 பேர் தேசிய புலனாய்வு அமைப்பினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் நடத்தும் லக்ஷர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது, ஹிஸ்புல் முஜாகிதீன் உள்ளிட்ட இயக்கங்களை சேர்ந்த பயங்கரவாதிகள் திட்டம் தீட்டி பயங்கரவாத சதித்திட்டம் நடத்துவதாக கடந்த மாதம் பத்தாம் தேதி தேசிய புலனாய்வு அமைப்பு வழக்கு பதிவு செய்தது. மேலும் இந்த தீவிரவாதிகளுக்கு உதவியதன் அடிப்படையில் கஷ்மீரில் சோதனை நடத்திய தேசிய புலனாய்வு அமைப்பினர் இருபத்தி மூன்று பேரை கைது செய்தனர்.

தொடர்ந்து இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், மேலும் இவ்வழக்கில் கூடுதலாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பயங்கரவாத இயக்கங்களின் ஆதரவாளர்களாக இருப்பதுடன் பயங்கரவாதிகளுக்கு பல்வேறு உதவிகள் செய்துள்ளதாகவும் தேசிய புலனாய்வு அமைப்பின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்