கார்த்தி சிதம்பரத்திற்கு மேலும் 3 நாள் சிபிஐ-க்கு காவல்!

Published by
Venu

நீதிமன்றம்  , கார்த்தி சிதம்பரத்தை மேலும் 3 நாள் காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி வழங்கியுள்ளது.

டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ, கார்த்தி சிதம்பரத்தின் 5 நாள் சிபிஐ காவல், இன்று மாலையுடன் முடிவடைவதால் அவரை மேலும் 8 நாள் காவலில் விசாரிக்க அனுமதிக்குமாறு  மனு தாக்கல் செய்தது. ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் முறைகேடாக வெளிநாட்டு முதலீடுகளை திரட்ட உதவுவதற்காக, கார்த்தி சிதம்பரத்திற்கு 3 கோடி ரூபாய்க்கு மேல் லஞ்சம் வழங்கியதாக, இந்திராணி முகர்ஜி கூறிய வாக்குமூலம் மட்டுமல்லாது வேறு பல உறுதியான ஆதாரங்களும் இருப்பதாக சிபிஐ வழக்கறிஞர் தெரிவித்தார்.

கார்த்தி சிதம்பரத்திடம் இருந்து கைப்பற்றப்பட்ட மொபைல் போனின் பாஸ்வேர்டை அவர் தர மறுப்பதாகவும், எந்த கேள்வியைக் கேட்டாலும், தாம் அரசியல் ரீதியாக பழிவாங்கப்படுவதாகக் கூறுவதாகவும் சிபிஐ வாதிட்டது. கார்த்தி சிதம்பரத்தின் காவலை நீட்டிக்காவிட்டால் ஆதாரங்களை திரித்து விடுவதற்கு வாய்ப்பிருப்பதாகவும் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதேசமயம், லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் நிறுவனத்திற்கும் கார்த்தி சிதம்பரத்திற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என அவரது தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி வாதிட்டார்.

கார்த்தி சிதம்பரத்தின் கைது நடவடிக்கை உள்நோக்கம் கொண்டது என்றும் கடந்த 6 மாதங்களில் சிபிஐ ஒரு சம்மன் கூட அனுப்பவில்லை என்றும் அவர் கூறினார். கடந்த ஆகஸ்டில் 22 மணி நேரம் விசாரணை நடத்திய சிபிஐ, அதன் பிறகு அவரிடம் கேட்க ஏதுமில்லை என்பதாலேயே 6 மாதங்களில் எவ்வித சம்மனும் அனுப்பவில்லை என்றும், கார்த்தி சிதம்பரத்தை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் எனவும் அபிஷேக் சிங்வி வலியுறுத்தினார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட சிபிஐ நீதிமன்றம், கார்த்தி சிதம்பரத்தை மேலும் 3 நாள் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கியது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

4 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

6 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

6 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

6 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

6 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

7 hours ago