நாளை முதல் கர்தார்பூர் வழித்தடம் மீண்டும் திறக்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள பகுதி தான் கர்தார்பூர் பகுதி. சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக் தனது கடைசி காலத்தில் இந்த பகுதியில் தான் வாழ்ந்து மறைந்ததாக கூறப்படுகிறது. எனவே அவரது நினைவாக அப்பகுதியில் தர்பார் சாஹிப் குருத்வாரா ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
சீக்கிய மதத்தினர் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது இந்த கர்தார்பூர் பகுதியில் உள்ள குருத்வாரா சென்று தரிசிக்க வேண்டும் என்பது அவர்களது கடமை. ஆனால், கொரோனா பரவல் காரணமாக இந்த கர்தார்பூர் வழித்தடம் கடந்த ஓராண்டு காலமாக மூடப்பட்ட நிலையில் இருந்தது. அந்தப் பகுதி நாளை முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ஸ்ரீ குரு நானக் தேவ் ஜி மற்றும் சீக்கிய மதம் மீது பிரதமர் மோடி கொண்டுள்ள அபரிமிதமான மரியாதையை இந்த முடிவு காட்டுகிறது எனவும் குறிப்பிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,
சென்னை : தமிழ்நாடு அரசு நீண்ட காலமாக நீட் தேர்வுக்கு எதிராகப் போராடி வருகிறது. நீட் தேர்வு, கிராமப்புற மற்றும்…
பஞ்சாப் : நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து நான்காவது தோல்வியைச் சந்தித்துள்ளது. நேற்றைய ஆட்டத்தில்…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் இலக்கியத்தில் முக்கிய பங்கு வகித்தவருமான குமரி அனந்தன்,…
பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…