Categories: இந்தியா

கர்நாடக மக்களின் ஒற்றுமை மற்ற மாநிலங்களுக்கு எச்சரிக்கை மணி.! முன்னாள் முதல்வர் H.D.குமாரசாமி கருத்து.!

Published by
மணிகண்டன்

காவிரியில் இருந்து உச்சநீதிமன்ற உத்தரவு படி உரிய அளவு தண்ணீர் தர வேண்டும் என தமிழக அரசு தரப்பும், காவிரியில் கர்நாடக மக்களுக்கு குடிக்கவே தண்ணீர் இல்லாத நிலையில் இருப்பதால், எங்களால் தண்ணீர் தர முடியாது என கர்நாடக தரப்பு கூறி வருகிறது. இந்நிலையில் தான் அண்மையில் கர்நாடக அரசு , காவிரி ஒழுங்காற்று மையத்தின் பரிந்துரை படி உரிய அளவு தண்ணீரை தமிழகத்துக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்தும், காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் தரக்கூடாது எனவும் இன்று கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கு சுமார் 1600க்கும் மேற்பட்ட கன்னட அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. இதனால் இன்று கர்நாடகா மாநிலம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவுகிறது.

இந்த முழு அடைப்புக்கு எதிர்கட்சிகளான பாஜக, மஜக கட்சிகளும் ஆதரவு தெரிவித்து உள்ளன. இது குறித்து மதசார்பற்ற ஜனதா தள கட்சி தலைவரும், கர்நாடக மாநில முன்னாள் முதல்வருமான H.D.குமாரசாமி தனது X சமூகவலைதள பதிவில் தனது கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.

இன்றைய முழு அடைப்பு போராட்டம் அனைத்து இடங்களிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நிலம், மொழி, நிலத்தடி நீர் பிரச்சினை வரும்போது நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். கர்நாடக குடும்பத்தில் உள்ள இந்த நல்லிணக்கமும் ஒற்றுமையும் அண்டை மாநிலங்களுக்கு எச்சரிக்கை மணியாக இருக்க வேண்டும். கன்னட உணர்வுகளை காங்கிரஸ் அரசு நசுக்கக் கூடாது. காவேரி எங்களுடையது என H.D.குமாரசாமி பதிவிட்டுள்ளார்.

கர்நாடக முழு அடைப்பு காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெங்களூருவில் நேற்று நள்ளிரவு முதல் இன்று நள்ளிரவு வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

SRH vs MI : வெற்றிப்பாதையை தொடருமா மும்பை? பேட்டிங் களத்திற்கு தயாரான ஹைதராபாத்!

ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…

1 hour ago

ரியல் ஹீரோ., பஹல்காம் தாக்குதலில் மக்களை காப்பாற்ற உயிர் விட்ட இஸ்லாமிய தொழிலாளி!

ஸ்ரீநகர் : காஷ்மீரில் நேற்று அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…

2 hours ago

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்: இன்றைய ஐபிஎல் போட்டியில் கொண்டாட்டத்துக்கு தடை..!

ஹைதராபாத் : ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் நேற்றைய தினம் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக,…

3 hours ago

பயங்கரவாத தாக்குதல்., காயமடைந்தவர்களை நேரில் சந்தித்த அமித்ஷா!

ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் நடந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு…

3 hours ago

காஷ்மீரில் இருந்து வெளியேறும் சுற்றுலா பயணிகள்., விமான சேவை அதிகரிப்பு! தமிழர்கள் நிலை என்ன?

டெல்லி : நேற்று ( ஏப்ரல் 22) காஷ்மீர் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம்…

4 hours ago

“இந்த சீசன் சென்னை சரியா ஆடல என்பது உண்மைதான்” – சிஎஸ்கே CEO காசி விஸ்வநாதன்.!

புதுச்சேரி : சிஎஸ்கே அணியின் தொடர் தோல்வி குறித்து கருத்து தெரிவித்த அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் வரும்…

4 hours ago