மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது – கர்நாடக அரசு அறிவிப்பு!

Published by
Rebekal

மறைந்த நடிகர் புனித ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது வழங்கப்படும் என கர்நாடக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கன்னட திரை உலகின் பவர் ஸ்டார் என அழைக்கப்படும் நடிகர் புனித் ராஜ்குமார் கடந்த அக்டோபர் மாதம் 29 ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். 46 வயதுடைய நடிகர் புனித் ராஜ்குமார் உடலுக்கு கர்நாடக முதல்வர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். இந்நிலையில் இவரது உடல் கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி முழு அரசு மரியாதையுடன் பெங்களூர் கண்டீரவா ஸ்டுடியோவில் உள்ள அவரது பெற்றோர் சமாதி அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் பெங்களூர் அரண்மனை மைதானத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை கர்நாடக திரைப்பட வர்த்தக சபை சார்பில் நடிகர் புனித் ராஜ்குமாருக்கு புகழஞ்சலி கூட்டம் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை அவர்கள் நடிகர் புனித் ராஜ்குமாரை கவுரவிக்க ஏராளமான ஆலோசனைகள் கூறப்பட்டதாகவும், அவருக்கு தேசிய விருது அளிப்பது குறித்து தனக்கு விருப்பம் உள்ளதாகவும் கூறியுள்ளார்.

இது குறித்து அமைச்சரவை கூட்டத்தில் விவாதித்து தீர்மானம் நிறைவேற்றப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் நடிகர் புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது அளிக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார். மேலும் மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் பெற்றோர்களான ராஜ்குமார் மற்றும் அவரது மனைவி பார்வத்தம்மா ஆகியோரின் நினைவிடங்களை போல நடிகர் புனித் ராஜ்குமாருக்கும் நினைவிடம் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Recent Posts

பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் : நாளை விண்ணில் பாய்கிறது எலான் மஸ்கின் க்ரூ டிராகன்!

பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் : நாளை விண்ணில் பாய்கிறது எலான் மஸ்கின் க்ரூ டிராகன்!

வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த வருடம் ஜூன் மாதம் ஸ்டார்…

6 hours ago

“இதற்காகவே நாங்கள் பெரியாரை கொண்டாடுகிறோம்” நிர்மலா சீதாராமனுக்கு பதில் கொடுத்த விஜய்!

சென்னை : பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த…

7 hours ago

இது எங்க காலம்.! ஐசிசி தரவரிசையில் எகிறி அடிக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்!

டெல்லி : அண்மையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் இருக்கும்…

8 hours ago

30 பேர் சுட்டுக்கொலை! 190 பேர் மீட்பு! மற்றவர்கள் நிலை? பாக். ரயில் கடத்தல் அப்டேட்…

இஸ்லாமாபாத்  : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…

9 hours ago

யாருக்கு அறிவில்லை? அமைச்சர் பி.டி.ஆர் vs அண்ணாமலை வார்த்தை போர்!

சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு…

10 hours ago

மார்ச் 22-ஐ குறிவைத்து காத்திருக்கும் திமுக! பல்வேறு மாநில ஆளும்கட்சி, எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு!

சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக திமுக தொடர்ந்து கூறிவருகிறது. இந்த தொகுதி…

11 hours ago