பப்ஜிக்கு ‘நோ’ சொன்னதால் தந்தையின் தலையை வெட்டிய கொடூர மகன்!

Published by
மணிகண்டன்

கர்நாடக மாநிலம் பெலகாவி எனும் மாவட்டத்தில் உள்ள காகதி எனும் பகுதியில் வசித்து வருபவர் ரகுவீர்.  இவர் டிப்ளமோ முடித்துவிட்டு, வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இவரது தந்தை ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி. இவர் பெயர் சங்கரப்பா ஆகும்.  வீட்டில் இருக்கும் ரகுவீர் எப்போது பார்த்தாலும் தனது மொபைல் போனில் பப்ஜி கேம் விளையாடி வந்துள்ளார். இதனால் தந்தை சங்கரப்பாவிற்கும், ரகுவீருக்கும் இடையே பிரச்சனை அடிக்கடி சண்டை வந்துள்ளது.

இந்நிலையில் ரகுவீர் போனுக்கு ரீசார்ஜ்செய்ய தந்தையிடம் பணம் கேட்டுள்ளார். பணம் தர தந்தை மறுக்கவே வெளியே சென்று அக்கம் பக்கத்தினர் வீட்டு ஜன்னலை கல்லைக் கொண்டு தாக்கியுள்ளார். இதனால் அக்கம்பக்கத்து வீட்டினர் போலீசில் புகார் அளித்து ரகுவீரை போலீஸார் அழைத்து சென்றுள்ளனர். பின்னர் அவருக்கு அறிவுரை வழங்கி வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

வீட்டிற்கு வந்த பிறகும் றகுவீர் பப்ஜி விளையாட்டை விளையாடி உள்ளார். இதில் மீண்டும் சங்கரப்பாவிற்கும், ரகுவீருக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ரகுவீர் நள்ளிரவில் தனது தந்தையை சரமாரியாக வெட்டி தலையை துண்டாக வெட்டி எறிந்துள்ளார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் உள்ளே வந்து பார்த்து போலீசுக்கு புகார் தெரிவித்தனர்.

பின்னர் ரகுவீரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் அவர் தன் தந்தையை கொன்றதை ஒப்புக் கொண்டுள்ளார். மகனே தந்தையைக் கொன்றது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

இளையராஜாவின் பயோபிக் படம் என்னாச்சு? தனுஷ் எடுத்த அதிரடி முடிவு!

இளையராஜாவின் பயோபிக் படம் என்னாச்சு? தனுஷ் எடுத்த அதிரடி முடிவு!

சென்னை : இசைஞானி இளையராஜா, தனது இசை மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை தொட்டவர் என்று சொல்லி தான் தெரியவேண்டும்…

1 hour ago

என்னை பத்தி ஏன் பேசுறீங்க? அன்புமணி பேச்சால் கடுப்பான மயிலாடுதுறை எம்.பி. சுதா!

சென்னை : நேற்று கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் " சென்னையில் இருந்து வந்த வேட்பாளரை…

2 hours ago

ஜெயலலிதாவுடன் உரையாடும் வாய்ப்பை பெற்றிருந்தது என்னுடைய கௌரவம்! பிரதமர் மோடி பதிவு!

டெல்லி : மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்77-வது  பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு…

3 hours ago

NZvBAN : தடுமாறிய பங்களாதேஷ்..தூக்கி நிறுத்திய ஜாகிர் அலி! நியூசிலாந்துக்கு வைத்த இலக்கு..

ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணி ராவல்பிண்டி கிரிக்கெட்…

3 hours ago

தோல்வியை சந்தித்த விடாமுயற்சி…சீக்கிரம் ஓடிடிக்கு வந்த முக்கிய காரணம்?

சென்னை : விடாமுயற்சி படத்திற்கு இப்படியா ஆகவேண்டும் என ரசிகர்கள் கவலைப்படும் விதமாக படம் நன்றாக இருந்தாலும் பெரிய அளவில் ரசிகர்களை…

4 hours ago

தவெக-வில் இணைகிறாரா காளியம்மாள்? அறிக்கையில் ‘இதை’ கவனித்தீர்களா?

சென்னை : சமீபகாலமாகவே சீமானின் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகும் நிர்வாகிகள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. குறிப்பிட்டு…

4 hours ago