மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், பிரதமர் மோடியை கொன்றுவிடுவோம்.. மிரட்டல் விடுத்த கர்நாடகா நபர்!

pm modi

PM Modi : மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் பிரதமர் மோடியை கொன்றுவிடுவேன் என்று மிரட்டல் விடுத்த கர்நாடக நபர் மீது வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளது.

நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான பணியில் தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து மாநில கட்சிகளும் தீவிரமாக செய்யப்பட்டு வரும் நேரத்தில், மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தால், பிரதமர் மோடியைக் கொன்றுவிடுவோம் என்று மிரட்டும் வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டதற்காக கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த ஒருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Read More – உணவு விருந்துக்கு மட்டும் ரூ.200 கோடி செலவு! ஆனந்த் அம்பானி திருமண கொண்டாட்டத்தின் பிரம்மாண்டம்

பிரதமர் மோடிக்கு மிரட்டல் விடுத்த நபர் முகமது ரசூல் கத்தாரே என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அந்த வீடியோவில் அந்த நபர் வாள் ஏந்தியபடி இருந்ததாகவும் கூறப்படுகிறது. அந்த நபரை ஐதராபாத் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அம்மாநில காவல்துறை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளது.

Read More – வன்கொடுமை செய்யப்பட்ட ஸ்பானிஷ் பெண்ணுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு.!

இதுதொடர்பாக பிரபல செய்தி நிறுவனமான ஏஎன்ஐ பதிவில், முகமது ரசூல் கதாரே தனது சமூக ஊடக கணக்கில் வீடியோவை ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில் வாளைப் பிடித்துக் கொண்ட அந்த நபர், மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், பிரதமர் மோடியை கொன்றுவிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

Read More – SBI வங்கி செயல் கேவலமானது.! விளாசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.!

மிரட்டல் விடுத்த நபர் மீது யாத்கிரியின் சூர்பூர் காவல் நிலையத்தில் ஐபிசி மற்றும் ஆயுதச் சட்டம் பிரிவு 505(1)(பி), 25(1)(பி) ஆகியவற்றின் கீழ் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதேபோன்று, பிரதமர் மோடி மற்றும் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்த 45 வயது நபர் ஒருவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்