இந்தியாவிலேயே முதல் மாநிலமாக கர்நாடகாவில் நடப்பு ஆண்டில் தேசிய கல்வி கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளது.
பெங்களூருவில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.இதில்,மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் காணொலி வாயிலாகவும்,கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, கர்நாடக உயர் கல்வித் துறை அமைச்சர் அஷ்வத் நாராயண், தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்துவதற்கான நிபுணர் குழுவை சேர்ந்த நிபுணர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
அதன்பின்னர்,இந்தியாவிலேயே முதல் மாநிலமாக கர்நாடகாவில் நடப்பு கல்வி ஆண்டில் தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளது.இந்த தேசிய கல்விக் கொள்கை திட்டம் உட்பட பல்வேறு திட்டங்களை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து,பேசிய அமைச்சர் தர்மேந்திர பிரதான்:”நாட்டில் முதல் மாநிலமாக தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தியதற்காக கர்நாடக முதல் அமைச்சர் பசவராஜ் பொம்மை, கல்வியமைச்சர் அஸ்வந்த் நாராயண் ஆகியோரை பாராட்டுகிறேன். இந்த வரலாற்று சிறப்புமிக்க முடிவால் நாட்டில் பிற மாநிலங்களுக்கு கர்நாடக முன்மாதிரியாக விளங்குகிறது.
தேசிய கல்வி கொள்கையின் காரணமாக அறிவு தளத்தில் கர்நாடகா மிக வேகமாக முன்னேறும் என்று உறுதியாக நம்புகிறேன். கர்நாடகாவின் கல்வித் துறையில் ஏற்படும் மாற்றங்களைப் பார்த்து பிற மாநிலங்களும் விரைவில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தும்”, என்று தெரிவித்தார்.
டெல்லி : அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மற்றும் அவரது மனைவி உஷா வான்ஸ் ஆகியோர் காலை 10 மணி…
சென்னை : விசிக தலைவர் திருமாவளவன் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டு சில விஷயங்களை பேசியிருந்தார். அதில் " ஒரு…
சென்னை : தமிழகத்தில் பல்கலைக்கழகங்களின் வேந்தராக (Chancellor) இருக்கும் ஆளுநருக்கு, பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்கள் மற்றும் துணைவேந்தர்கள் மாநாடு போன்றவற்றை நடத்துவதற்கு…
மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில்,…
டெல்லி : அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தனது மனைவி உஷா வான்ஸ், மூன்று குழந்தைகளுடன் இந்தியாவுக்கு நான்கு நாள்…
பெல்ஜியம் : அஜித்குமார் நடிப்பையும் தாண்டி பைக் மற்றும் கார் ரேசிங்கில் அதிகம் ஆர்வம் கொண்ட ஒருவர். ஒரு பக்கம் படங்களில்…