பள்ளிகள் திறப்பது குறித்து ஆராய நிபுணர் குழு அமைத்துள்ளோம். அந்த குழு அறிக்கையை சமர்ப்பித்த பின்னரே பள்ளிகள் திறப்பது குறித்து அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். என கர்நாடக கல்வி அமைச்சர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரானா தொற்று பாதிப்பினால் கர்நாடக மாநிலத்தில் ஜூலை 5 வரையில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு அமல்படுத்தபடுவதாக அம்மாநில முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார். அந்த ஞாயிற்றுக் கிழமைகளில் அத்தியாவசிய தேவைகள் தவிர்த்து மற்ற எதற்கும் பொதுமக்கள் வெளியே வர கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொரானா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டுள்ள பள்ளிகளை எப்போது திறப்பது என்பது குறித்து அம்மாநில கல்வித்துறை அமைச்சர் சுரேஷ்குமாரிடம் பத்திரிக்கையாளர்கள் கேட்டபோது அவர், ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையிலான வகுப்புகள் எப்போது தொடங்கலாம் எனவும், எவ்வாறு மாணவர்களுக்கு பயிற்றுவிக்கலாம் எனவும் ஆராய நிபுணர் குழு அமைத்துள்ளோம். அந்த குழு அறிக்கையை சமர்ப்பித்த பின்னரே பள்ளிகள் திறப்பது குறித்து அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.’ என தெரிவித்தார்.
தற்போது கர்நாடக மாநிலத்தில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட மாட்டாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். பள்ளிகளை செப்டம்பருக்கு பின்னர் தொடங்குங்கள் என்பதே பெற்றோர்களின் கருத்தாக உள்ளது.
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தில் பெரும் கனவுடன் அரசியல் வாழ்க்கையை தொடங்கிய சஜி, மாரடைப்பால் மறைந்தது அக்கட்சியினரை சோகத்தில்…
சென்னை : நடிகர் சிம்பு வெந்து தணிந்தது காடு படத்தை தொடர்ந்து அடுத்ததாக எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை இருந்தாலும் அவருக்கு…
சென்னை : நேற்று தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் 2025 - 2026 தாக்கல் செய்யப்பட்டது. அதனை அடுத்து இன்று வேளாண்…