Categories: இந்தியா

ரவா இட்லி ஆர்டர் செய்த ‘ராமேஸ்வரம் கஃபே’ குற்றவாளி.! வெளியான பரபரப்பு தகவல்கள்…

Published by
மணிகண்டன்

Rameshwaram Cafe : பெங்களூரு ஒயிட்ஃபீல்டு பகுதியில் பிரபலமாக உள்ள ராமேஸ்வரம் கஃப ஹோட்டலில் நேற்று மதியம் 1 அளவில் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் ஹோட்டலில் இருந்த ஊழியர்கள் உட்பட 10 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள இந்த குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து கர்நாடக போலீசார் மற்றும் தேசிய புலனாய்வு அமைப்பினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் நடந்த இடத்திற்கு கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் நேரில் சென்று ஆய்வு செய்தார்.  பின்னர் ANI செய்தியாளர்களிடம் பல்வேறு தகவல்களை பகிர்ந்துகொண்டார்.

Read More – ராமேஸ்வரம் கஃபேவில் வெடிகுண்டு வெடித்த சிசிடிவி வெளியானது..!

அவர் கூறுகையில், சம்பவம் குறித்து அனைத்து கோணங்களிலும் தீவிரமாக விசாரணை நடைபெற்று வருவதாகவும், இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை விசாரிக்க 7-8 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், பெங்களூரு அரசு பேருந்தில் குற்றவாளி வந்து சென்றதாகவும், சிறிய கை பை ஒன்றை வைத்திருந்ததாகவும், பின்னர் கேஷ் கவுண்டரில் ரவா இட்லி ஆர்டர் செய்து பின்னர் அதனை உட்கொள்ளாமல் அங்கிருந்து சென்றுவிட்டதாகவும் டி.கே.சிவகுமார் கூறினார்.

READ MORE- ராமேஸ்வரம் கஃபேயில் வெடித்த மர்ம பொருள்.. விசாரணைக்கு வந்த என்.ஐ.ஏ..!

அந்த நபர் சென்ற பிறகு ஒரு மணி நேரத்துக்கு பின்னர் அந்த பை வெடித்ததாக டி.கே.சிவக்குமார் கூறினார். பெங்களூர் மக்கள் கவலைப்பட வேண்டாம் என்றும் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் கேட்டுக்கொண்டார்.

இந்த சம்பவம் குறித்து மைசூரில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, ஹோட்டலில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.  ஹோட்டலில் யாரோ ஒரு இளைஞர் பையை வைத்து விட்டு சென்றது தெரியவந்துள்ளது. சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.

READ MORE- ராமேஸ்வரம் கஃபேவில் வெடித்தது வெடிகுண்டு தான்..முதல்வர் சித்தராமையா..!

முந்தைய அரசாங்கங்களிலும் இதுபோல பல குண்டுவெடிப்புகள்நிகழ்ந்துள்ளது. இது சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுப்போம். இந்த விஷயத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்யக்கூடாது எனவும் முதல்வர் சித்தராமையா தெரிவித்துக் கொண்டார்.

இந்த குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து, பெங்களூரு காவல்துறையினர் கடுமையான சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் மற்றும் வெடிபொருள் தடை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Recent Posts

“சிறந்த நடிகர்களில் ஒருவர் விஜய்”! GOAT படத்தை பாராட்டிய பாடலாசிரியர்!

சென்னை : கோட் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதுவும் ரிலீஸ் ஆன முதல்…

11 hours ago

“அத்தான் அத்தான்”.. அழகாக வெளியான கார்த்தியின் ‘மெய்யழகன்’ டீசர்.!

சென்னை : இயக்குனர் சி பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி முக்கிய வேடங்களில் நடித்துள்ள "மெய்யழகன்"…

11 hours ago

எனக்கு ஏன் காங்கிரஸ் சீட் கொடுக்கவில்லை.? பஜ்ரங் புனியா விளக்கம்.!

டெல்லி : வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்யுத்த…

11 hours ago

“RCB கேப்டன் கே.எல்.ராகுல்”! கோஷமிட்ட ரசிகர்கள்..வைரலாகும் வீடியோ!

சென்னை : நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பெயர் ட்ரெண்டிங்கில் இருந்தது என்றே சொல்லவேண்டும். ஏனென்றால்,…

12 hours ago

“வயிற்றெரிச்சல் பழனிச்சாமி., உங்களுக்கு அருகதை இல்லை .” ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்.!

சென்னை :  அசோக் நகர் அரசுப் பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர், மாற்றுத்திறனாளிகள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதும், அதனை கண்டித்த…

12 hours ago

நிச்சயம் முடிந்து 5 மாதம்: திருமணத்தை நிறுத்திய மலையாள மேக்கப் கலைஞர்.!

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரபல மேக்கப் கலைஞரும், திருநங்கையுமான சீமா வினீத், திருமணத்தில் இருந்து விலகுவதாக…

12 hours ago