கேஜிஎப்-2 இசையை பயன்படுத்திய விவகாரம்.! ராகுல்காந்திக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்.!

Published by
மணிகண்டன்

கே.ஜி.எப் 2 இசையை பயன்படுத்திய விவகாரம் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி விளக்கம் அளிக்க கர்நாடக நீதிமன்றம் உத்தரவு. 

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தற்போது கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில் பாரத ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வருகிறார். அவர் நடைபயணம் மேற்கொண்ட விடியோ கிளிப்பாக தயார் செய்து அதில் கே.ஜி.எப் 2 இசையை கோர்த்து அதனை பாரத் ஜோடோ யாத்ரா எனும் டிவிட்டர் பக்கத்திலும், காங்கிரஸ் டிவிட்டர் தளத்திலும் பதிவிடப்பட்டது.

அனுமதியின்றி கே.ஜி.எப்-2 இசையை பயன்படுதியாக கூறி கடந்த மாதம் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் எம்ஆர்டி மியூசிக் நிறுவனமானது அவர்களின் வழக்கறிஞர் எம்.பிரணவ் குமார் மூலம் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது.

இந்த மனுவில் வீடியோ பதிவிட்ட காங்கிரஸ் மற்றும் பாரத் ஜோடோ யாத்ரா ஆகிய அதிகாரபூர்வ டிவிட்டர் கணக்குகளை முடக்க வேண்டும் என கோரப்பட்டு இருந்தது. இதனை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதிகள், சம்மந்தப்பட்ட டிவீட்களை நீக்குமாறு டிவிட்டர் இந்தியா நிறுவனத்திற்கு உத்தரவிட்டனர்.

தற்போது இந்த வழக்கு விசாரணை இன்று மீண்டும் தலைமை நீதிபதி பிரசன்னா பி.வரலே மற்றும் நீதிபதி அசோக் எஸ்.கினகி ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தபோது, காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, ஜெய்ராம் ரமேஷ் மற்றும் சுப்ரியா ஷிரினேட்  ஆகியோர் விளக்கம் அளிக்க அவர்களுக்கு நோட்ட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

 

 

Recent Posts

பருப்பு விவகாரம்., “பாஜகவின் ஆதாரமற்ற குற்றசாட்டு.!” தமிழக அரசு வெளியிட்ட விளக்க அறிக்கை..,

பருப்பு விவகாரம்., “பாஜகவின் ஆதாரமற்ற குற்றசாட்டு.!” தமிழக அரசு வெளியிட்ட விளக்க அறிக்கை..,

சென்னை : தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு சரிவர கிடைக்கப்பெறவில்லை என்றும், கடந்த 6 மாதங்களாக சரிவர கிடைக்காமல்…

20 mins ago

IND vs NZ : ‘ஒரு கேப்டனாக வேதனை அடைந்தேன்’.. ரோஹித் சர்மா பேச்சு!

பெங்களூர் : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளானது மழையின் காரணமாக நடைபெறாமல்…

1 hour ago

‘நவம்பர்… தமிழகத்திற்கு அதிக மழை கொண்டு வரும்’ – விளக்கம் கொடுத்த வெதர்மேன்!

சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது அடுத்ததாக வரும் அக்-20 ம்…

2 hours ago

ஹமாஸ் தலைவர் உயிரிழப்பு : “மீதம் இருப்பவர்களையும் அழிப்போம்” – நெதென்யாகு சபதம்!

ஜெருசலேம் : காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடந்த ஒரு வருட காலமாக போர்…

2 hours ago

காலை 10 மணி வரை இந்த 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

சென்னை : வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையைக் கடந்தது. இதனால், தமிழகம் மற்றும்…

2 hours ago

பை பை ஆஸி.! இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது தென்னாப்பிரிக்கா மகளிர் அணி!

துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்தப்…

11 hours ago