விவசாயிகளை பயங்கரவாதிகள் என கூறிய விவகாரம்.. நடிகை கங்கனா ரணாவத் மீது எப்.ஐ.ஆர் பதிவு!

Published by
Surya

வேளாண் சட்ட மசோதாவிற்கு எதிராக போராட்டம் நடத்தும் விவசாயிகளை பயங்கரவாதிகள் என விமர்சித்த கங்கனா ரணாவத் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்ய துமகுரு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

மத்திய அரசு, நாடாளுமன்றத்தில் வேளாண் சட்டத்திருத்த மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்தும் மசோதா உள்ளிட்ட மூன்று மசோதாகளை சமீபத்தில் நிறைவேற்றியது.

இந்த மசோதாக்கள், விவசாயிகளுக்கு எதிராக இருப்பதாகவும், இதனை திரும்பபெறக்கோரி எதிர்க்கட்சியினர் மற்றும் விவசாயிகள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி கொண்டே வருகின்றனர். மேலும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியும் வேளாண் மசோதாக்களை திரும்பபெறக்கோரி ட்ராக்டர் பேரணி நடத்தினார்.

இந்தநிலையில், பாலிவுட் நடிகையான கங்கனா ரணாவத், தனது ட்விட்டர் பக்கத்தில் போராட்டம் நடத்தும் விவசாயிகளை “பயங்கரவாதிகள்” என விமர்சித்துள்ளார். அந்த பதிவில், குடியுரிமை சட்டத்திற்கு எதிரான தவறான தகவலை பரப்பி கலவரத்தை ஏற்படுத்திய நபர்கள், தற்போது வேளாண் சட்டத்திற்கு எதிராகவும் தவறான தகவல்களை பரப்பிக்கொண்டு தேசத்தில் பயங்கரவாதத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றதாகவும், அவர்கள் பயங்கரவாதிகள் என தெரிவித்துள்ளார்.

கங்கனாவின் இந்த பதிவிற்கு எதிர்ப்புகள் கிளம்ப, கர்நாடக மாநிலம், துமகுரு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கங்கனா ரணாவத் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.

Published by
Surya

Recent Posts

ரொம்ப மோசமான பார்ம்…இந்தியாவின் B டீமை கூட பாகிஸ்தான் தொட முடியாது..சுனில் கவாஸ்கர் பேச்சு!

ரொம்ப மோசமான பார்ம்…இந்தியாவின் B டீமை கூட பாகிஸ்தான் தொட முடியாது..சுனில் கவாஸ்கர் பேச்சு!

நடப்பாண்டு சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நியூசிலாந்து அணிக்கு…

23 minutes ago

இந்தி எது ஆங்கிலம் எது ? விமர்சனம் செய்த அண்ணாமலை!

சென்னை : திமுகவினர் பல்வேறு இடங்களில் மத்திய அரசு இந்தி மொழியை திணிப்பதாக குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக…

24 minutes ago

பாக்., வீரர்களுக்கு சரியான சம்பளம் கொடுக்கலயா? சாம்பியன்ஸ் டிராபி தோல்விக்கு முன்னாள் வீரர் கடும் சாடல்.!

பாகிஸ்தான் : 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, முன்னாள் கேப்டனும் பேட்டிங் ஜாம்பவானுமான ஜாவேத் மியாண்டட்…

1 hour ago

39 தொகுதிகள் 31ஆக மாறும்! தமிழ்நாட்டின் குரல்வளை நசுக்கப்படும்! மு.க.ஸ்டாலின் அழைப்பு!

சென்னை : வரும் மார்ச் 5ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தலைமை செயலகத்தில் நடைபெற உள்ளது.…

2 hours ago

தவெக இரண்டாம் ஆண்டு தொடக்க விழா… தீயாக வேலை செய்யும் ஆனந்த் – ஆதவ் அர்ஜுனா.!

சென்னை : தவெக இரண்டாம் ஆண்டு தொடக்கவிழா நாளை புதன்கிழமை 26 பிப்ரவரி மகாபலிபுரம் 5 நடசத்திர விடுதி உள்…

3 hours ago

அம்பேத்கரை விட மோடி பெரியவரா? கொந்தளித்த அதிஷி! சஸ்பெண்ட் செய்த சபாநாயகர்!

டெல்லி : நடந்து முடிந்த டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் 48 இடங்களை கைப்பற்றி  27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக ஆட்சியை…

3 hours ago