கர்நாடகா:கொரோனவால் செத்துவிட்ட மனிதநேயம்..!நடுரோட்டில் துடிதுடித்து இறந்த பெண்..!

Published by
Edison

கர்நாடகாவில்,கொரோனா தொற்று பரவுதல் அச்சம் காரணமாக உதவிக்கு யாரும் வராததால் பெண் ஒருவர் நடுரோட்டில் துடிதுடித்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம்,கோலார் மாவட்டத்தில் வசித்து வந்த பெண்(வயது 50) ஒருவர்,கடந்த சில நாட்களாக காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்துள்ளார்.இதனையடுத்து,நேற்று காலை மருத்துவமனைக்கு புறப்பட்டு செல்லும் வழியில் திடீரென்று மயங்கி விழுந்தார்.கொரோனா தொற்று பாதித்திருக்கும் என்பதால் அப்பெண்ணுக்கு உதவி செய்ய ஒருவர் கூட முன்வரவில்லை.அதற்குப் பதிலாக ரோட்டில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அப்பெண்ணை செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர்.

இந்நிலையில்,எந்தவித உதவியும் கிடைக்காததால் அப்பெண் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.அதன்பின்னர்,இதைப்பற்றிக் கேள்விப்பட்ட தாசில்தார் மஞ்சுநாத் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பஞ்சாயத்து மற்றும் போலீசார் உதவியுடன் உடலை மீது அடக்கம் செய்தார்.மேலும்,மக்களிடம் உள்ள மனித நேயம் முழுவதும் செத்துவிட்டது என்று தாசில்தார் மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்தார்.

Published by
Edison

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

8 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

13 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

13 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

13 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

13 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

13 hours ago