நான் யார் முதுகிலும் குத்த மாட்டேன் மாற்று கட்சிக்கு செல்ல மாட்டேன் என கர்நாடக காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே.சிவகுமார் பேசியுள்ளார்.
கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று 2 நாட்கள் கடந்த பின்னும் இன்னும் முதல்வர் யார் என்பதில் காங்கிரஸ் கட்சிக்குள் ஆலோசனை தொடர்ந்து கொண்டு இருக்கிறது. காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே.சிவகுமார் மற்றும் முன்னாள் முதல்வர் சித்தராமையா இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இதில் இன்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் ஆலோசனை நடத்தி இறுதி முடிவு எடுப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே.சிவகுமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், நான் யாருடைய முதுகிலும் குத்த மாட்டேன். யாரையும் மிரட்டி ஆதாயம் தேட மாட்டேன். அந்த மாதிரியாக நான் நடந்து கொண்டது இல்லை. நான் ஏன் வேறு கட்சிக்கு செல்ல வேண்டும்.? எல்லோரும் ஒருநாள் இறக்க தான் போகிறோம். நான் ஏன் மோசமான பெயருடன் சாக வேண்டும் என வெளிப்படையாக தனது நிலை குறித்து பேசியுள்ளார் காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…