எரிபொருள் விலை குறைப்பை கண்டித்து கர்நாடகாவில் காங்கிரஸ் தலைவர்கள் சிலர் சட்டசபைக்கு மாட்டு வண்டியில் வந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கர்நாடக சட்டப்பேரவையில் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில், இந்த கூட்டத்திற்கு எரிபொருள் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளைத் குறித்து பேச எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது. மேலும், அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வை கண்டித்து சட்டசபைக்கு மாட்டு வண்டியில் வந்து தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க உள்ளதாகவும் காங்கிரஸ் கட்சியினர் திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகியது.
இந்த சட்டசபை கூட்டத்தொடர் இன்று முதல் பத்து நாளைக்கு நடைபெற உள்ள நிலையில், இந்த கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று கர்நாடக எதிர்க்கட்சித் தலைவரான காங்கிரஸை சேர்ந்த சித்தராமையாவும், காங்கிரஸ் தலைவர் சிவக்குமார் மற்றும் சில காங்கிரஸ் தலைவர்கள் சட்டமன்றத்திற்கு மாட்டு வண்டியில் வந்து எரிபொருள் மற்றும் எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அதன் பின்பதாக செய்தியாளர்களை சந்தித்த சித்தராமையா, எரிபொருள் விலை உயர்வுக்கு காங்கிரஸை குறை கூறுவது சாக்குப்போக்கு எனவும், ஒன்றரை லட்சம் கோடியாக இருந்த கடன் தற்பொழுது 24 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். ஒன்றரை லட்சம் கோடி எங்கு உள்ளது? 24 லட்சம் கோடி எங்கு உள்ளது? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…