எடியூரப்பா அவர்கள், கர்நாடகா முதல்வராக பதவியேற்று இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், இன்று அவர் பதவி விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு, ஜூலை 26-ம் தேதி, எடியூரப்பா அவர்கள் கர்நாடகா முதல்வராக பொறுப்பேற்றார். இந்நிலையில், கர்நாடகா முதல்வராக உள்ள எடியூரப்பா அவர்கள், பதவி விலக உள்ளதாக சமீப நாட்களாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், இதுகுறித்து பதிலளித்த அவர், கட்சி மேலிடம் கூறினால் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய தயார். வரும் 25-ம் தேதிக்கு பிறகு பாஜக தலைமையின் வழிகாட்டுதல் படி செயல்படுவேன் என்று தெரிவித்திருந்தார்.
பாரதிய ஜனதா கட்சியை பொறுத்தவரையில், 75 வயதை தாண்டிய தலைவர்களுக்கு கட்டாய ஒய்வு அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், 78 வயதை எட்டியுள்ள எடியூரப்பா அவர்கள், 2 ஆண்டுகள் மட்டுமே பதவியில் இருக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், எடியூரப்பா அவர்கள், கர்நாடகா முதல்வராக பதவியேற்று இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனையடுத்து, இன்று அவர் பதவி விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, மத்திய அரசு தற்போது கடுமையான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. நேற்றைய தினம்…
சூரத்: பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து ஒவ்வொரு துறையிலும் தனது பலத்தை அதிகரிப்பதில் இந்தியா தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. வாகா…