ஆளுநர் கொடுத்த கெடுவும் முடிந்துவிட்டது! இன்னும் நடைபெறாத நம்பிக்கை வாக்கெடுப்பு!

கர்நாடக சட்டசபை அரசியல் களம் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கிவருகிறது. 16 எம்எல்ஏக்கள் ராஜினாமா , நம்பிக்கை வாக்கெடுப்பு, சட்டசபை அமளி என பரபரப்பாக இயங்கி வருகிறது.
நேற்று கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என எதிர்பார்த்த நிலையில் அது நடக்காமல் போனது. இதனால் பாஜக எம்எல்ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டு, பின்னர் ஆளுநரிடம் புகார் அளித்தனர்
இதில் ஆளுநர், சபாநாயகரிடம் இன்று மதியம் 1.30க்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என கெடு விதித்து இருந்தார். ஆனால் மணி 2 ஐ தாண்டியும் இன்னும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை.
லேட்டஸ்ட் செய்திகள்
வசூலில் சக்கை போடு… ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த GBU.!
April 15, 2025
சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்.!
April 15, 2025