விஸ்ட்ரான் நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலையை ஊழியர்கள் அடித்து நொறுக்கிய நிலையில் ,சம்பள விவகாரத்திற்காக மன்னிப்பு கோருவதாக தெரிவித்துள்ளது.
தைவான் நாட்டின் விஸ்ட்ரான் நிறுவனம் கர்நாடகா மாநிலத்தில் கோலாா் மாவட்டத்தில் உள்ள நரசாபுரா தொழிற்பேட்டையில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் செல்போன்களை உற்பத்தி செய்து வருகிறது.இந்த நிறுவனத்தில் 5000 -க்கும் மேற்பட்டோர் ஊழியர்கள் வருவதாகக் கூறப்படுகிறது.இந்த 5000 பேரில் , 2000 பேர் ஒப்பந்தப் ஊழியர்கள் ஆவார்கள்.ஆனால் ஊழியர்களுக்கு கடந்த சில மாதங்களாக முறையாக சம்பளம் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.ஆகவே இது குறித்து விஸ்ட்ரான் நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் வாக்குவாதம் ஏற்பட்டது.அந்த சமயத்தில் ஊழியர்கள் தொழிற்சாலையை அடித்து நொறுக்கினார்கள். மேலும் அங்கிருந்த கணினிகள், மடிக் கணினிகள் ,வாகனங்கள் என அனைத்தையும் உடைத்து நொறுக்கினார்கள்.இது குறித்து போலீசாரிடம் தகவல் அளிக்கப்பட்ட நிலையில் வன்முறையில் ஈடுபட்டதாக ஊழியர்கள் 100 க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.
இதன் பின்பு விஸ்ட்ரான் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,சம்பள விவகாரத்திற்காக மன்னிப்பு கோருவதாக தெரிவித்துள்ளது.மேலும் விஸ்ட்ரான் இன்ஃபோகாம் உற்பத்தி இந்தியாவின் துணைத் தலைவர் வின்சென்ட் லீவை நீக்கம் செய்துள்ளதாக அறிவித்து உள்ளது.இது போன்ற சம்பவம் மீண்டும் நடக்காது என்பதை தெரிவித்து கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…