திரைப்பட மாஃபியா கும்பலின் முக்கிய குற்றவாளி கரண் ஜோஹர் – கங்கனா ரனாவத் ட்வீட்.!

Published by
பாலா கலியமூர்த்தி

திரைப்பட மாஃபியா கும்பலின் முக்கிய மையப்புள்ளி கரண் ஜோஹர் தான் என்று கங்கனா ரனாவத் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் மரண வழக்கை சிபிஐ அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். அப்போது, சுஷாந்தின் காதலி ரியா சக்ரபொர்த்தியின் செல்போனில் உள்ள வாட்ஸ் அப் உரையாடலில் போதைப்பொருட்கள் பயன்படுதியது தெரியவந்தது. இதனால், ரியா மற்றும் அவரது சகோதரர் சௌரி சக்ரபொர்தி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால், போதைப்பொருள் விற்பனையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

போதைபொருள் விற்பனையாளரிடம், ரியா போதை பொருள் வாங்கி பயன்படுத்துகிறாரா? இல்லை வேறு யாருக்கும் கொடுத்துள்ளாரா? என்பது பற்றி இன்னும் உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை. இருந்தாலும், இந்த நேரடி தொடர்பானது சுஷாந்த் சிங் வழக்கில் பெரும் திருப்புமுனையாக கருதப்படுகிறது. இதனையடுத்து, பாலிவுட் வாரிசு நடிகர்களாலும், வாரிசு நடிகர்களை ஊக்குவிக்கும் இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் கொடுத்த மன உளைச்சலால் தான் சுஷாந்த் தற்கொலை செய்துகொண்டார் என்று பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர். சுஷாந்த் தற்கொலையைத் தொடர்ந்து பாலிவுட்டின் வாரிசு நடிகர்களை நடிகை கங்கனா ரனாவத் தொடர்ந்து குற்றசாட்டி வருகிறார்.

இந்நிலையில், திரைப்பட மாஃபியா கும்பலின் முக்கிய மையப்புள்ளி கரண் ஜோஹர் தான் என்று கங்கனா ரனாவத் கூறியுள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டரில், திரைப்பட மாஃபியா கும்பலின் முக்கிய குற்றவாளி கரண் ஜோஹர் என்றும் பல உயிர்களையும், வாழ்க்கையையும் அழித்த பிறகும் கூட அவர் சுதந்திரமாக சுற்றித் திரிகிறார். அவருக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எங்களுக்கு ஏதாவது நம்பிக்கை இருக்கிறதா? அனைத்தையும் முடித்துக் கொண்ட பிறகு, அவரும் அவரது ஹைனா கும்பலும் என்னை தேடி வரப்போகின்றன என்று கூறி, பிரதமரின் அலுவலகத்தை டேக் செய்தும் பதிவிட்டுள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

3 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

4 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

5 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

5 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

5 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

5 hours ago