கர்நாடகத்தில் கன்னட மொழியே முதன்மையானது- முதல்வர் எடியூரப்பா

Default Image

கர்நாடகத்தில் கன்னட மொழியே முதன்மையானது என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா கருத்து தெரிவித்துள்ளார்.

உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.இவரது இந்த கருத்துக்கு  தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இது குறித்து கர்நாடக முதல்வர் எடியூரப்பா கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், கர்நாடகத்தில் கன்னட மொழியே முதன்மையானது.அனைத்து அதிகாரப்பூர்வ மொழிகளும் நாட்டில் சமமானவையே .கன்னட மொழிக்கு தரப்படும் முக்கியத்துவத்தில் ஒருபோதும் சமரசம் கிடையாது. கன்னட மொழி, கலாசாரத்தை ஊக்குவிப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்