சிவசேனா கட்சியின் மிரட்டலையும் தாண்டி மத்திய அரசின் ஒய் பிளஸ் பாதுகாப்புடன் மும்பைக்கு வந்தடைந்தார், பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்.
மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீராக உணருவதாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். இவரது கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதற்கு சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் , கங்கனாவின் இந்த கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும் பயமாக இருந்தால் மும்பை மாநகரத்துக்கு வர வேண்டாம் என்றும் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து மீண்டும் கங்கனா ரனாவத் மீண்டும் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு, “நான் மும்பைக்கு வரவேண்டாம் என்று பலரும் பயமுறுத்தி வருகின்றனர். வருகின்ற 9 ஆம் தேதி நான் மும்பைக்கு வரவுள்ளேன். முடிந்தால் என்னை தடுத்து பாருங்கள்” என்று தெரிவித்துள்ளார்.
அவருக்கு ஒய் ப்ளஸ் பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ள நிலையில், கங்கனா, செப்டம்பர் 9-ம் தேதி அன்று நான் மும்பைக்கு முடிவெடுத்துள்ளதாக தெரிவித்தார். மும்பை விமான நிலையத்தை தாம் அடையும் நேரத்தைப் பகிருவதாகவும், முடிந்தால் தடுத்துப் பாருங்கள்” என தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், சிவசேனா கட்சியின் மிரட்டலையும் தாண்டி மத்திய அரசின் ஒய் பிளஸ் பாதுகாப்புடன் நடிகை கங்கனா ரனாவத், மும்பைக்கு வந்தடைந்தார். அவர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக சிவசேனா கட்சியினர், விமான நிலையத்தில் கருப்பு கோடி ஏந்தி போரட்டத்தில் ஈடுபட்டனர். அதுமட்டுன்றி, இத்தகைய பாதுகாப்பு பெரும் ஒரே பாலிவுட் பிரபலம் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…