வானொலியில் மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் காஞ்சிரங்கால் கிராம மக்களை பாராட்டினார்.
மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் நாட்டு மக்கள் அனைவருக்கும் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள் தெரிவித்து, பேசிய பிரதமர் மோடி, ஒவ்வொரு பண்டிகையின் பின்னாலும் ஒரு செய்தி மறைந்திருக்கிறது. இதுபோன்ற பண்டிகைகளை அடுத்த தலைமுறையினருக்கு நாம் எடுத்து செல்லவேண்டும். நாம் நமது பண்டிகைகளின் பின்னால் உள்ள அறிவியலை அறிந்து கொண்டாட வேண்டும்.
இன்றைய இளைஞர்களிடம் விளையாட்டு மீதான காதலையும், ஆர்வத்தையும் பெருமளவில் பார்க்க முடிகிறது. கிராமங்களில் தொடர்ச்சியாக விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட வேண்டும். 4 தசாப்தங்களுக்கு பிறகு ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்திய வீரர்கள் திறமையை நிரூபித்துள்ளனர். ஒவ்வொரு குடும்பமும் விளையாட்டை பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர்.
சிவகங்கை அருகே காஞ்சிரங்கால் கிராமத்தில் மக்கள் உதவியுடன் கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கப்படுவதாக தெரிவித்த பிரதமர் மோடி, கழிவுகளையும் செல்வமாக மாற்ற முடியும் என்பதற்கு காஞ்சிரங்கால் கிராமம் ஓர் உதாரணம் என்று பாராட்டினார். மேலும், ஒவ்வொருவரின் பங்களிப்பின் மூலம் இந்தியா பல உச்சங்களை அடைய முடியும் எனவும் தெரிவித்தார்.
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…