நடிகர் சுஷாந்த் சிங் வழக்கில் மஹாராஷ்டிரா அரசு மற்றும் மும்பை போலீசார் விசாரித்த விதம் குறித்து நடிகை கங்கனா ரணாவத் பல குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். மேலும், மும்பை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல உணருவதாக கூறினார்.
இதனால், சிவசேனா கட்சி தலைவர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், மும்பை பாந்திரா பகுதியில் உள்ள கங்கனா பங்களாவில் சட்டவிரோதமாக கட்டுமானங்கள் நடந்துள்ளதாக கூறி மாநகராட்சி நோட்டீஸ் ஒட்டியது.
நோட்டீஸ் குறித்து 24 மணி நேரத்தில் பதிலளிக்க கெடுவும் கொடுக்கப்பட்டது. ஆனால், கங்கனா பதிலளிக்கவில்லை இதனால், நேற்று முன்தினம் மாநகராட்சி அதிகாரிகள் சட்டவிரோத கட்டுமானங்கள் அகற்றப்படுவது குறித்து நோட்டீஸ் ஒட்டி பொக்லைன் இயந்திரம் மூலம் அனுமதியின்றி கட்டப்பட்ட பகுதிகளை இடித்தனர்.
இந்நிலையில், கங்கனா மும்பை உயர்நீதிமன்றத்தில் தனது பங்களா வீட்டில் இடிப்பு பணியை மேற்கொள்ள தடை விதிக்க மனு தாக்கல் செய்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் மாநகராட்சி இடிப்பு பணிக்கு இடைக்கால தடை விதித்தது.
இந்நிலையில், கங்கனா ரணாவத் இடிப்பு விவகாரம் தொடர்பான வழக்கை செப்டம்பர் 22-ம் தேதி வரை ஒத்திவைத்தது மும்பை உயர் நீதிமன்றம்.
சென்னை : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே கிரிக்கெட் ரசிகர்களை கையில் பிடிக்க முடியாது என்று சொல்லலாம். அந்த அளவுக்கு தங்களுக்கு…
சென்னை : அதிமுக உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மற்றும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு…
சென்னை : அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.…
மும்பை : இன்றயை காலத்தில் டிஜிட்டல் வழியாக மர்ம நபர்கள் வயதானவர்களை குறி வைத்து அவர்களிடம் பணம் மோசடி செய்து…
டெல்லி : தொகுதி மறுவரையறை பற்றி விவாதம் நடத்த வேண்டும் என நாடாளுமன்றத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி…