இதை ரத்து செய்ய வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் சிரோமணி அகாலி தளம் தலைவர்கள் இன்று உள்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
சீக்கியர்களுக்கு தனிநாடு வேண்டும் என்று கோரி காலிஸ்தான் என்ற அமைப்பு 1995-ல் பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் பியாந்த்சிங்கை தற்கொலைப் படை தாக்குதல் மூலம் கொடூரமாக படுகொலை செய்தது. இதற்காக தீவிரவாதி ரஜோனாவுக்கு கடந்த 2007ம் ஆண்டு விசாரணை நீதிமன்றம் இவருக்கு தூக்கு தண்டனை விதித்தது. எனவே, ரஜோனாவை கடந்த 2012-ல் இவரை தூக்கிலிட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால் சீக்கியர் தலைவர்களின் கோரிக்கையை ஏற்று ரஜோனா தூக்கிலிடப்படவில்லை
இந்நிலையில் சீக்கிய குரு குருநானக்சிங்கின் 550வது பிறந்த நாள் ஆண்டை முன்னிட்டு ரஜோனாவின் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால்இதுகுறித்து, நாடாளுமன்றத்தில் ரஜோனாவின் தூக்கு தண்டனையை ரத்து செய்யப் போவதில்லை என உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார். இதனைத் தொடர்ந்து சிறையில் அண்மையில் தீவிரவாதி ரஜோனா, தமது தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். பின்னர், குருத்வார பிரபந்த கமிட்டி நிர்வாகிகள் வேண்டுகோளை ஏற்று தீவிரவாதி ரஜோனா தமது உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டார். இந்நிலையில் இன்று பஞ்சாபை சேர்ந்த சிரோமணி அகாலி தளம் கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் பாதல் தலைமையிலான குழுவினர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டெல்லியில் சந்தித்தனர். இச்சந்திப்பின் போது ரஜோனாவின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என வலியுறுத்தினர்..
டெல்லி : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது. போட்டியில் விளையாட வீரர்கள் தயாராகி…
வாஷிங்டன் : நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் இணைந்து Crew-10 மிஷனை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளனர்.கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்க…
சென்னை : நேற்று (மார்ச் 14) 2025-26 நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்திருந்தார்.…
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.66,000-ஐ கடந்தது நகை…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ…
சென்னை : ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ரியோ நடிக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்புகள் எழுந்த சூழலில் அவர்…