#JustNow: பரபரப்பு.. கேரளாவில் ராகுல் காந்தி அலுவலகம் சூறை!

Default Image

கேரளா மாநிலம் வயநாட்டில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் அலுவலகத்தை குண்டர்கள் சூறையாடியதால் பரபரப்பு.

கேரளா மாநிலம் வயநாட்டில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் அலுவலகத்தை குண்டர்கள் சூறையாடியுள்ளனர். சுற்றுச்சுவர் வழியாக ஏறி குதித்து அலுவலகம் உள்ளே புகுந்த கும்பல் கண்ணில் பட்ட பொருட்களை அடித்து நொறுக்கியதாகவும் குற்றசாட்டு எழுந்துள்ளது. அந்த கும்பல் இந்திய மாணவர் சங்கத்தின் கொடியை ஏந்திருந்தாக கூறப்படுகிறது. இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்தவர்கள் தான் அலுவலகத்தை சூறையாடியதாக இளைஞர் காங்கிரஸார் குற்றசாட்டியுள்ளனர்.

கேரளா மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி அமைப்புகளுடையே தொடர்ந்து மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. அடிக்கடி அது வன்முறையாகவும் வெடிக்கிறது. சமீபத்தில் முதலமைச்சருக்கு எதிராக காங்கிரஸ் கட்சி கேரளாவில் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களை நடத்தியது. இதற்கு பதிலடியை வயநாடு மக்களவை தொகுதி உறுப்பினரான ராகுல் காந்தியின் அலுவலகத்தை இடதுசாரி அமைப்பை சார்ந்தவர்கள் சூறையாடினார்கள் என்றும் காங்கிரஸ் கட்சி குற்றசாட்டியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்