பார்த்தா சாட்டர்ஜி, அர்பிதா முகர்ஜியை ஆகஸ்ட் 18-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு.
மேற்கு வாங்க மாநிலத்தில் ஆசிரியர் பணி நியமன ஊழல் தொடர்பாக முன்னாள் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளியான அர்பிதா முகர்ஜியை அமலாக்கத்துறை கடந்த மாதம் கைது செய்தது. இந்த வழக்கு தொடர்பான சோதனையில், அர்பிதா முகர்ஜி வீட்டில் மொத்த 50 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், ஆசிரியர் பணி நியமன முறைகேடு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள பார்த்தா சாட்டர்ஜி, அர்பிதா முகர்ஜியை ஆகஸ்ட் 18-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க கொல்கத்தா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே, மேற்கு வங்க அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சட்டவிரோதமான முறையில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களை நியமனம் செய்ததில் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட பார்த்தா சட்டர்ஜி மற்றும் அர்பிதா முகர்ஜி ஜூலை 23 அன்று கைது செய்யப்பட்டதில் இருந்து விசாரணை அமைப்பின் காவலில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே எழுந்த பிரச்சினை பெரிய அளவில் பேசுபொருளாகி தற்போது மெல்ல மெல்லக்…
சென்னை : ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…
துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 4-வது போட்டியாக நேற்று நியூசிலாந்து மகளிர் அணியும் இந்திய மகளிர்…
கரூர் : குளித்தலை பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியையாக பணியாற்றி வரும் சங்கீதா என்பவர் சில நாட்களுக்கு…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக,…
சென்னை : தமிழ்நாட்டில் வருகிற 15-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…