#Justnow:மீண்டும் அதிகரிக்கும் கொரோனா – அனைத்து மாநில செயலாளர்களுடன் இன்று மத்திய அரசு முக்கிய ஆலோசனை!

Published by
Edison

நாடு முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா தீவிரமாகப் பரவிய நிலையில் கொத்துக் கொத்தாக மக்கள் உயிரிழந்தனர்.இதனையடுத்து,கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டது.இதனால்,கொரோனா பரவல் குறைந்ததோடு ஏராளமான உயிரிழப்புக்கள் தடுக்கப்பட்டுள்ளன.

ஆனால்,தற்போது நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது.அதன்படி,நேற்று 2,364 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவாகியுள்ளன.

இந்நிலையில்,மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச சுகாதாரச் செயலாளர்களுடன் இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.குறிப்பாக,கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை அதிகரிப்பது குறித்து ஆலோசனை நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே,நாடு முழுவதும் 12-14 வயதிற்குட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் மார்ச் 16,2022 அன்று தொடங்கப்பட்டது.அதன்படி,இதுவரை, 32.2 மில்லியனுக்கும் அதிகமான இளம் பருவத்தினர் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸைப் பெற்றுள்ளனர்.மேலும்,18-60 வயதிற்குட்பட்டவர்களுக்கான முன்னெச்சரிக்கை மருந்து(precaution dose)  செலுத்தும் பணிகள் கடந்த ஏப்ரல் 10, 2022 முதல் தொடங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து,மத்திய சுகாதார அமைச்சகம் பகிர்ந்துள்ள தரவுகளின்படி,இந்தியாவில் இதுவரை 1.91 பில்லியனை (1,91,79,96,905) தாண்டி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Recent Posts

IND vs NZ : ‘ஒரு கேப்டனாக வேதனை அடைந்தேன்’.. ரோஹித் சர்மா பேச்சு!

IND vs NZ : ‘ஒரு கேப்டனாக வேதனை அடைந்தேன்’.. ரோஹித் சர்மா பேச்சு!

பெங்களூர் : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளானது மழையின் காரணமாக நடைபெறாமல்…

30 mins ago

‘நவம்பர்… தமிழகத்திற்கு அதிக மழை கொண்டு வரும்’ – விளக்கம் கொடுத்த வெதர்மேன்!

சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது அடுத்ததாக வரும் அக்-20 ம்…

36 mins ago

ஹமாஸ் தலைவர் உயிரிழப்பு : “மீதம் இருப்பவர்களையும் அழிப்போம்” – நெதென்யாகு சபதம்!

ஜெருசலேம் : காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடந்த ஒரு வருட காலமாக போர்…

53 mins ago

காலை 10 மணி வரை இந்த 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

சென்னை : வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையைக் கடந்தது. இதனால், தமிழகம் மற்றும்…

1 hour ago

பை பை ஆஸி.! இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது தென்னாப்பிரிக்கா மகளிர் அணி!

துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்தப்…

10 hours ago

நாளை எந்தெந்த இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம் கொடுத்த அலர்ட்!

சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று…

13 hours ago