#JustNow: 5ஜி ஏலம் நிறைவு – ரூ.1,50,173 கோடிக்கு அலைக்கற்றை ஏலம்!

Default Image

மிகவும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 5ஜி அலைக்கற்றை ரூ.1,50,173 கோடிக்கு ஏலம் நடைபெற்றுள்ளதாக தகவல்.

கடந்த 7 நாட்களாக மிகவும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த 5ஜி ஏலம் தற்போது நிறைவு பெற்றது. அதன்படி,  ரூ.1,50,173 கோடிக்கு 5ஜி அலைக்கற்றை ஏலம் விடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஏலத்தின் இறுதியில் 4 நிறுவனங்கள் ரூ.1,50,173 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளதாகவும், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதிக அளவில் 5ஜி அலைக்கற்றையை ஏலம் எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய அரசு இன்று மாலை வெளியிடும் என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் குறிப்பிடத்தக்க அளவு 5ஜி அலைக்கற்றையை ஏலம் எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், 5ஜி அலைக்கற்றை விற்பனை வருவாய்க்கான தற்காலிக ஏலம் ரூ.1,50,173 கோடி என்றும் இறுதி விலையின் மதிப்பு வெளியிடப்படும் எனவும் கூறப்படுகிறது.

அதிவேக மொபைல் இணைய இணைப்பை வழங்கும் திறன் கொண்ட 5G ஸ்பெக்ட்ரம் மூலம் பெறப்பட்ட மாப்-அப் கடந்த ஆண்டு ரூ.77,815 கோடி மதிப்பிலான 4ஜி அலைக்கற்றைகள் விற்பனையானது. 2010-ல் 3ஜி ஏலத்தில் ரூ. 50,968.37 கோடிக்கு மூன்று மடங்கு அதிகமாகும். இந்த நிலையில், ஜூலை 26 அன்று நடந்த 5ஜி ஏலத்தின் முதல் நாளில் ரூ.1.45 லட்சம் கோடி மதிப்புள்ள ஏலங்கள் கிடைத்தன. இதன்பின் ஏலத்தொகை அதிகரிக்க தொடங்கிய நிலையில், 5ஜி அலைக்கற்றை ரூ.1,50,173 கோடிக்கு ஏலம் விடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்