சத்தீஸ்கர் உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியான அஜய்குமார் திரிபாதி காலமானார் .
முன்னாள் நீதிபதி திரிபாதி க்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது .இந்த நிலையில் அவருக்கு இன்று (சனிக்கிழமை ) இரவு 9 மணி அளவில் மாரடைப்பு ஏற்பட்டு உயிர்பிரிந்தது.மரணம் அடைந்த ஏ.கே.திரிபாதி வயது 52 .
ஏ.கே.திரிபாதி இந்தியாவில் ஊழலை ஒழிக்க அமைக்கப்பட்ட அரசியல் சாசன அமைப்பான லோக்பாலின் நீதித்துறை உறுப்பினராகவும், சத்தீஸ்கர் உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியாகவும் இருந்தார்.
அவர் கடந்த மாதம் எய்ம்ஸில் கோவிட் -19 க்கு சோதனை செய்தார் கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது . அவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் விபத்துக்குள்ளானவர்கள் சேர்க்கப்படும் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார் .பின்னர் அந்த பகுதி கோவிட் -19 க்கான பிரத்தேக மருத்துவமனையாக மாற்றப்பட்டது .திரிபாதி தான் அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல் நபர் .
அதன் பின்னர் கடந்த 3 நாட்களாக உடல்நிலை மிகவும் மோசமடைந்து தீவிர சிகிச்சை பிரிவில் வெண்டிலேட்டர் உதவியுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.இந்தியாவில் உயர் பதவியில் உள்ள ஒருவர் கொரோனாவுக்கு பலியாவது இதுவே முதல் முறை.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…