புதிய சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்பை பெறுவதற்கு இனிமேல் ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் போதும் எனும் அதிரடி அறிவிப்பை இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தலைவர் எஸ்.எம் வைத்தியா அவர்கள் ஊரகப் பகுதிகளை சேர்ந்த மக்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு ஏதுவாக சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்பு பெறுவதற்கு மிஸ்டுகால் கொடுக்கும் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். இதன்படி நாடு முழுவதும் உள்ள விருப்பமுள்ள வாடிக்கையாளர்கள் அனைவரும் 84549 555555 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தால் போதும். உங்களுக்கான புதிய சமையல் எரிவாயு இணைப்பு கொடுக்கப்படும்.
இந்தியன் ஆயில் செயலியின் http://cx.indianoil.in வலைத்தளம், 75888 88882 எனும் வாட்ஸப் நம்பர் அல்லது 77189 55555 எனும் குறுஞ்செய்தி நம்பர் மூலமாக சமையல் கேஸ் சிலிண்டரை முன்பதிவு செய்து கட்டணத்தை அமேசான், பேடிஎம் போன்ற பணப்பரிமாற்ற செயலி மூலமாக செலுத்திக் கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் வாடிக்கையாளர்கள் ஒரு இணைப்பு கேஸ் சிலிண்டர் வசதியை கொண்டவர்களாக இருந்தால், இரட்டை இணைப்பு பெறும் வசதியும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும் வழக்கமாக வாங்கக்கூடிய 14.2 கிலோ சமையல் கேஸ் சிலிண்டருக்கு பதிலாக ஐந்து கிலோ சிலிண்டர் பெரும் வசதியையும் வாடிக்கையாளர்களால் பெற முடியும் என இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…