பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைத்துவிட்டீர்களா?…ஜூன் 30 தான் கடைசி தேதி..! வீட்டிலிருந்தே எளிமையாக எப்படி இணைக்கலாம்..!

Published by
Sharmi

பான் கார்டை ஆதாருடன் இணைக்க இன்னும் 5 நாட்களே உள்ளது. வீட்டில் இருந்தே எளிமையாக எப்படி இணைக்கலாம் என்று பாருங்கள்.

பான் மற்றும் ஆதாரை இணைப்பதற்கு மார்ச் 31 ஆம் தேதி தான் கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர், கொரோனா பெருந்தொற்றை கருத்தில் கொண்டு இந்த காலக்கெடுவை ஜூன் 30 ஆக நீட்டிக்கப்பட்டது. இந்தியாவில் ஆதார் எண் மிக முக்கியமான ஒன்று. இதை பான் கார்டுடன் இணைக்க வேண்டும். இல்லையென்றால், உங்களுடைய பான் கார்டு செயலற்றதாக மாறும். மேலும் ரூ.1000 அபராதமும் விதிக்கப்படும். பான் மற்றும் ஆதாரை எளிமையாக டிஜிட்டல் முறை வழியாக சில நிமிடங்களில் இணைக்க முடியும்.

முதலில் எஸ்எம்எஸ் மூலமாக இணைப்பது எப்படி என்று பார்க்கலாம். 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்புவதன் வழியாக எளிமையாக இரண்டையும் இணைக்கலாம். அதற்கு UIDPAN<space><12 digit Aadhaar><space><10 digit PAN> இவற்றை எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். உதாரணத்திற்கு UIDPAN 000011112222 AAAAA0011B இதுபோன்று உங்களுடைய எண்களை சரியாக டைப் செய்து அனுப்ப வேண்டும். அனுப்பிய பிறகு உங்களின் பெயர், பிறந்ததேதி பான் மற்றும் ஆதாரில் சரிபார்க்கப்பட்டு பின்னர் இணைக்கப்படும்.

இரண்டாவதாக வலைத்தளம் வழியாக இணைப்பது. இதற்கு வருமானவரி துறையின்  போர்ட்டலுக்கு செல்ல வேண்டும். incometaxindiaefiling.gov.in. இதனுள் சென்றபின் இணைப்பு ஆதார் பிரிவு காண்பிக்கும். அதில் நுழைந்தபின், பெயர், பான் எண், ஆதார் எண் போன்ற விவரங்கள் கேட்கப்படும். சரியான தகவல் செலுத்திய பிறகு, உங்களின் ஆவணங்களை சரிபார்த்து பின்னர் பான் மற்றும் ஆதார் எண்  இணைக்கப்படும். இந்த எளிமையான முறைகளை பயன்படுத்தி பான் மற்றும் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளுங்கள்.

Published by
Sharmi

Recent Posts

சிறையில் இருந்து வந்த செந்தில் பாலாஜி! அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மரியாதை!

சிறையில் இருந்து வந்த செந்தில் பாலாஜி! அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மரியாதை!

சென்னை : சட்டவிரோத பணபரிவத்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்ப்பட்டிருந்த செந்தில் பாலாஜிக்கு இன்று உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதனை…

8 hours ago

ஐபிஎல் 2025 : “கொஞ்சம் புத்திசாலித்தனமா நடந்துக்கோங்க”! ஆர்சிபி ரசிகரை விளாசிய ரிஷப் பண்ட்!

சென்னை : நடைபெறப்போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தை நடத்துவதற்கு பிசிசிஐ தற்போது தயாராகி வருகிறது. இந்த நிலையில் ஒரு…

9 hours ago

“முதலமைச்சருக்கு என் வாழ்நாள் முழுவதும் நன்றியுடன் இருப்பேன்.,” செந்தில் பாலாஜி உருக்கம்.!

சென்னை : சட்டவிரோத பணபரிவத்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைதாகியிருந்த செந்தில் பாலாஜிக்கு இன்று உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. பின்னர் அந்த…

10 hours ago

புழல் சிறையில் இருந்து வெளியில் வந்தார் செந்தில் பாலாஜி.! தொண்டர்கள் உற்சாக வரவேற்பு.!

சென்னை : 471 நாட்கள் புழல் சிறையில் இருந்த செந்தில் பாலாஜிக்கு இன்று உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை…

10 hours ago

“2026ல் விஜய் முதலமைச்சர் பதவியில் அமர்வது உறுதி” புஸ்ஸி ஆனந்த் குஷி பேச்சு.!

சென்னை : விக்கிரவாண்டியில் அக். 27ம் தேதி நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டுக்கு விழுப்புரம் மாவட்ட…

11 hours ago

“பிக் பாஸ் போனா டைவர்ஸ் தான்”…வெங்கடேஷ் பட்டை எச்சரித்த மனைவி!

சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள, ஒரு சில பிரபலங்கள் விரும்பினாலும், ஒரு சில பிரபலங்கள் அதனை அலர்ஜியாகவே…

11 hours ago