பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைத்துவிட்டீர்களா?…ஜூன் 30 தான் கடைசி தேதி..! வீட்டிலிருந்தே எளிமையாக எப்படி இணைக்கலாம்..!

Published by
Sharmi

பான் கார்டை ஆதாருடன் இணைக்க இன்னும் 5 நாட்களே உள்ளது. வீட்டில் இருந்தே எளிமையாக எப்படி இணைக்கலாம் என்று பாருங்கள்.

பான் மற்றும் ஆதாரை இணைப்பதற்கு மார்ச் 31 ஆம் தேதி தான் கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர், கொரோனா பெருந்தொற்றை கருத்தில் கொண்டு இந்த காலக்கெடுவை ஜூன் 30 ஆக நீட்டிக்கப்பட்டது. இந்தியாவில் ஆதார் எண் மிக முக்கியமான ஒன்று. இதை பான் கார்டுடன் இணைக்க வேண்டும். இல்லையென்றால், உங்களுடைய பான் கார்டு செயலற்றதாக மாறும். மேலும் ரூ.1000 அபராதமும் விதிக்கப்படும். பான் மற்றும் ஆதாரை எளிமையாக டிஜிட்டல் முறை வழியாக சில நிமிடங்களில் இணைக்க முடியும்.

முதலில் எஸ்எம்எஸ் மூலமாக இணைப்பது எப்படி என்று பார்க்கலாம். 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்புவதன் வழியாக எளிமையாக இரண்டையும் இணைக்கலாம். அதற்கு UIDPAN<space><12 digit Aadhaar><space><10 digit PAN> இவற்றை எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். உதாரணத்திற்கு UIDPAN 000011112222 AAAAA0011B இதுபோன்று உங்களுடைய எண்களை சரியாக டைப் செய்து அனுப்ப வேண்டும். அனுப்பிய பிறகு உங்களின் பெயர், பிறந்ததேதி பான் மற்றும் ஆதாரில் சரிபார்க்கப்பட்டு பின்னர் இணைக்கப்படும்.

இரண்டாவதாக வலைத்தளம் வழியாக இணைப்பது. இதற்கு வருமானவரி துறையின்  போர்ட்டலுக்கு செல்ல வேண்டும். incometaxindiaefiling.gov.in. இதனுள் சென்றபின் இணைப்பு ஆதார் பிரிவு காண்பிக்கும். அதில் நுழைந்தபின், பெயர், பான் எண், ஆதார் எண் போன்ற விவரங்கள் கேட்கப்படும். சரியான தகவல் செலுத்திய பிறகு, உங்களின் ஆவணங்களை சரிபார்த்து பின்னர் பான் மற்றும் ஆதார் எண்  இணைக்கப்படும். இந்த எளிமையான முறைகளை பயன்படுத்தி பான் மற்றும் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளுங்கள்.

Published by
Sharmi

Recent Posts

போப் பிரான்சிஸ் உடல் நல்லடக்கம்! உலக நாட்டு தலைவர்கள் நேரில் மரியாதை!

போப் பிரான்சிஸ் உடல் நல்லடக்கம்! உலக நாட்டு தலைவர்கள் நேரில் மரியாதை!

வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…

7 hours ago

“ஓட்டு மட்டுமே குறிக்கோள் இல்லை., மக்களோடு பேசுங்கள்!” விஜய் கொடுத்த ‘குட்டி’ அட்வைஸ்!

கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…

8 hours ago

ஈரான் துறைமுகத்தில் பயங்கர வெடி விபத்து! 300க்கும் மேற்பட்டோர் காயம்!

தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…

9 hours ago

தவெக பூத் கமிட்டி கருத்தரங்கில் சிறிய தீ விபத்து? “ஒதுங்கி நில்லுங்கள்!” விஜய் அட்வைஸ்!

கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…

9 hours ago

தவெக பூத் கமிட்டி கருத்தரங்கு.., என்ன பேசப்போகிறார் விஜய்?

கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…

10 hours ago

கட்டாய கடன் வசூல்., 3 ஆண்டுகள் சிறை! புதிய சட்ட மசோதா விவரங்கள் இதோ…

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…

12 hours ago