தீ விபத்தில் சிக்கி பத்திரிகையாளர் மற்றும் நண்பரும் சேர்ந்து உயிரிழப்பு.!

Default Image

பாலம்பூர் மாவட்டத்தில் கோட்வாலி தேஹத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட  கிராமத்தில் தீ விபத்தில் ஒரு பத்திரிகையாளர் அவரது நண்பரும் சேர்ந்து உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்கள் இந்தி நாளிதழில் வேலை செய்து கொண்டிருந்த ராகேஷ் சிங்கின் நண்பர் பிந்து சாஹு என தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்னர்.

கல்வாரி கிராமத்தில் உள்ள வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ராகேஷ் சிங் மற்றும் அவரது நண்பர் பிந்து சாஹு ஆகியோருக்கு பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டதாக பால்ராம்பூர் காவல் கண்காணிப்பாளர் தேவ் ரஞ்சன் வர்மா தெரிவித்தார்.

சாஹு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தபோது, ​​சிங் 90 சதவீத தீக்காயங்களுடன் லக்னோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் அங்கு, அவர் உயிரிழந்தார் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், இது குறித்து காவல்துறையினரின் கூறுகையில், தம்பதியினரிடையே ஏற்பட்ட சில தகராறுகளைத் தொடர்ந்து ராகேஷ் சிங்கின் மனைவியும் குழந்தைகளும் இரண்டு நாட்களுக்கு முன்பு உறவினரின் வீட்டிற்குச் சென்றிருந்தனர் என்றும் கடந்த வெள்ளிக்கிழமை இரவு நடந்தது ஒரு தற்கொலை என்று காவல்துறை முடிவு செய்தது.

இருவரும் ஒரு அறையில் பூட்டப்பட்டு பின்னர் தீக்குளித்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும், வீட்டிலுள்ள மற்ற அறைகள் எதுவும் தீப்பிடித்ததில்லை. இதற்கிடையில், சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் வந்து ஆய்வு நடத்தி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news 2
Rahul gandhi - Thirumavalavan - Arvind Kejriwal
Erode East By Election - VC Chandrakumar - Seethalakshmi
Delhi election result 2025 - Rahul gandhi - Devender Yadav
Gold Rate
MS Dhoni HOUSE
Erode By Election Result