ஜே.என்.யு பல்கலைகழக மாணவர்கள் விவகாரம்… போராட்டத்திற்க்கு பிரபல பாலிவுட் நடிகை நேரில் சென்று ஆதரவு..

Published by
Kaliraj
  • தலைநகர் டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் ஆசிரியர் சங்கம் சார்பில் பொதுக்கூட்டம் ஒன்று  நடந்தது.
  • அப்போது, அங்கு முகத்தை மூடி துனியை  அணிந்து வந்த மா்ம நபர்கள் இரும்பு கம்பி, கம்பு போன்ற பயங்கர ஆயுதங்களால்  மாணவர்களை சரமாரியாக கொடூரமாக  தாக்கினர்.
   இந்த கொடூர  தாக்குதலில் பல மாணவர்கள்  காயம் அடைந்தனர். இந்த மாணவர்கள் மீதான இந்த கொலைவெறி தாக்குதல் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை  ஏற்படுத்தியது. இந்த மனித தன்மையற்ற செயலுக்கு காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் தங்களது  கண்டனத்தை  தெரிவித்திருந்தனர். இந்த  தாக்குதல் தொடர்பாக டெல்லி காவல்துறையும் வழக்குப்பதிவு செய்து தாக்குதல் நடத்தியவர்களை வலை வீசி தேடி வந்த நிலையில்,  டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தேச விரோத செயல்கள் அதிகம் நடக்கிறது என்றும் அதனால் தான்  நாங்கள்  இந்த தாக்குதலை நடத்தினோம் என்று இந்து ரக்‌ஷா தள் அமைப்பின் தலைவர் பிங்கி சவுத்ரி  அதிரடியாக தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக   டெல்லி காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலை கண்டித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் பல்வேறு விதமான போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி   ஜவஹர்லால் நேரு பல்கலைகழக  வளாகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும்   மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து ஜவஹர்லால் நேரு பல்கலைகழக வளாகத்திற்கு வெளியே நடைபெற்று வரும் மாணவர்களின் போராட்டத்திற்கு  பிரபல பாலிவுட் நடிகையான  தீபிகா படுகோனே திடீரென போராட்டம் நடக்கும் இடத்திற்க்கே நேரில் சென்று தனது ஆதரவை  தெரிவித்தார். நடிகை மாணவர்களின் போராட்டத்திற்கு  தனது ஆதரவு தெரிவித்தது பாலிவுட்டில் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் தற்போது மீண்டும் மிகப்பெரிய பூதாகரமாக வெடிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Published by
Kaliraj

Recent Posts

“இது துபாய்.. இது எங்கள் சொந்த ஊர் கிடையாது” சர்ச்சை கேள்விக்கு ரோஹித் சர்மா பதிலடி.!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபியில் நாளை நடைபெறவிருக்கும் அரையிறுதி போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த இரு அணிகளும் நாளை…

6 hours ago

ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி… தவெக தலைவர் விஜய் பங்கேற்பு.!

சென்னை : வருகின்ற மார்ச் 7ஆம் தேதி தவெக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ராயப்பேட்டை ஒய்எம்சிஏ…

6 hours ago

நம்மகிட்ட பட்ஜெட் கொடுத்தா லாபம் தாறுமாறா இருக்கும்…கெத்துக்கட்டும் ‘டிராகன்’ அஷ்வத்!

சென்னை : கொடுக்கப்படும் பட்ஜெட்டில் எந்த அளவுக்கு தரமான படத்தை கொடுத்து மக்களை கவர்ந்து அந்த படத்தினை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை…

7 hours ago

IND vs AUS : சாம்பியன்ஸ் டிராபி முதல் அரையிறுதி போட்டி… வானிலை, பிட்ச் நிலவரம்.!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதிப் போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை (மார்ச் 4 ஆம்…

8 hours ago

இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே! கேப்டன் பொறுப்பை தூக்கி ரஹானேயிடம் கொடுத்த கொல்கத்தா!

கொல்கத்தா : கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி வெற்றிபெற்று கோப்பையை வென்றது. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில்…

8 hours ago

நாகை மாவட்டத்திற்கான புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர்..!

நாகப்பட்டினம் : நாகையில் ரூ.82.99 கோடி மதிப்பிலான 206 புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பல்வேறு துறைகள்…

10 hours ago