மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியர் மீது வழக்குப்பதிவு!

Default Image

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியர் மீது மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக,  வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதுல் ஜோரி என்ற அந்த பேராசிரியர்(Atul Johri), வகுப்பறையில் மாணவிகளிடம் ஆபாசமாக பேசுவது, அத்துமீறி தொட்டுப் பேசுவது என நடந்து வந்துள்ளார். இதனால் கடும் அதிருப்தியும், கோபமும் அடைந்த மாணவிகள், வசந்த் கஞ்ச் (Vasanth Kanj) காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகார்களின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பாலியல் புகாருக்குள்ளான பேராசிரியர் அதுல் ஜோரி, பல்கலைக்கழக நிதியை  கையாடல் செய்ததாக ஏற்கனவே குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்