தாமாக முன்வந்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபித்து ஹேமந்த் சோரன் வெற்றி.
ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தலைமையிலான அரசு வெற்றி பெற்றது. ஜார்க்கண்ட் மாநில அரசுக்கு ஆதரவாக 48 வாக்குகள் கிடைத்த நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்காமல் பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்த நிலையில், 81 பேர் கொண்ட சட்டப்பேரவையில் 48 பேரின் ஆதரவுடன் ஹேமந்த் சோரன் வெற்றி பெற்றார்.
இதன்மூலம் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு பெரும்பான்மை இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. சுரங்க ஒதுக்கீடு முறைகேடு விவகாரத்தில், தன்னுடைய எம்எல்ஏ பதவி குறித்த கேள்வி நிலவி வந்ததால் தாமாக முன்வந்து நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி, வெற்றி பெற்றார் ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…