பொறியியல் படிப்பிற்கான ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.
ஜேஇஇ மெயின் தேர்வுகள் ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட கல்லூரிகளில் சேர்வதற்காக நடைபெறுகிறது. நடப்பாண்டில் ஜேஇஇ மெயின் தேர்வுகள் ஜனவரி மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடைபெற்றது. ஜனவரியில் 8 லட்சத்திற்கு மேற்பட்ட மாணவர்களும் , கடந்த 1-ம் தேதி முதல் 6 தேதி வரை 6 லட்சத்திற்கு மேற்பட்ட மாணவர்களும் தேர்வு எழுதினர்.
ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதிலும் இருந்து 24 மாணவர்கள் 100 விழுக்காடு மதிப்பெண்களை பெற்று தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளனர்.
அதில், தெலுங்கானாவில் இருந்து எட்டு பேரும், டெல்லியைச் சேர்ந்த ஐந்து பேர், ராஜஸ்தானில் இருந்து நான்கு பேர், ஆந்திராவைச் சேர்ந்த மூன்று பேர், ஹரியானாவைச் சேர்ந்த இருவர், குஜராத் மற்றும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த தலா ஒருவர் என 24 பேர் 100 விழுக்காடு மதிப்பெண் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், இந்த மதிப்பெண் பட்டியல் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு மாணவர் கூட இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்எல்ஏ மயிலை வேலுவின் இல்லத் திருமண விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட…
சென்னை : நடிகர், கார் ரேஸ் ஓட்டுநர் என பன்முக திறமையாளராக விளங்கும் அஜித் குமாருக்கு நேற்று முன்தினம் டெல்லியில்…
சென்னை : சென்னை தென்மேற்கு மாவட்டக்கழக செயலாளர் - சட்டமன்ற உறுப்பினர் மையிலாபூர் எம்.எல்.ஏ த.வேலுவின் மகள் அனுஷா -…
சென்னை : சந்தானம் நடிப்பில் 2016-ல் வெளியான தில்லுக்கு துட்டு படம் ஹிட்டானதை தொடர்ந்து அதே பாணியில் தில்லுக்கு துட்டு…
தர்மபுரி : இன்று தர்மபுரியில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த…
தருமபுரி : தேமுதிகவின் இளைஞரணி செயலாளராக விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார். பிரேமலதாவின் வசம் இருந்த பொருளாளர்…