ஜே.இ.இ மெயின் நான்காம் கட்ட தேர்வு தேதி மாற்றம் செய்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார்.
இந்தியாவில் முதன்மையான 25 ஐஐடிகள், 31 என்.ஐ.டிகள் மற்றும் மத்திய அரசின் உதவியுடனான 28 தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேருவதற்காக ஜே.இ.இ. முதன்மை நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஜேஇஇ எனப்படும் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு கடந்த மே மாதம் நடைபெற இருந்தது.
இந்த தேர்வில் பொறியியல் படிப்புக்கான தேர்வுகள் மூன்றாம் மற்றும் நான்காம் கட்டமாக நடைபெற இருந்தன. ஆனால், கொரோனா பரவல் அதிகமாக இருந்ததால் தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன. தற்போது நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால், ஏப்ரல் மாதம் நடைபெறவிருந்த ஜேஇஇ மெயின் தேர்வு ஜூலை 20 முதல் ஜூலை 25 வரை நடைபெறும் என அறிவிக்கப்படது.
இந்தாண்டுக்கான ஜே.இ.இ மெயின் தேர்வின் மூன்றாம் கட்ட தேர்வு ஜூலை 20 முதல் ஜூலை 25 வரை நடைபெறும் என்றும் நான்காம் கட்ட தேர்வு ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 2 வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது. தேர்வுக்கு விண்ணப்பிக்காதவர்கள் ஜூலை 6 முதல் ஜூலை 8 வரை முதல் கட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஜே.இ.இ மெயின் நான்காம் கட்ட தேர்வு தேதி ஒத்திவைத்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார். அதன்படி, JEE (முதன்மை) 2021 நான்காம் கட்ட தேர்வு ஆகஸ்ட் 26, 27 மற்றும் 31 ஆம் தேதிகளிலும், செப்டம்பர் 1 மற்றும் 2 ஆம் தேதிகளிலும் நடைபெறும். மொத்தம் 7.32 லட்சம் பேர் ஏற்கனவே JEE (முதன்மை) 2021 நான்காம் கட்ட தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
மேலும் ஜேஇஇ முதன்மை 2021 தேர்வின் மூன்றாம் கட்டம் மற்றும் நான்காம் கட்டம் தேர்வுகளுக்கு நான்கு வார இடைவெளியை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். தேர்வுக்கு ஜூலை 20 வரை விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …