இந்தியாவில் உள்ள NIT கல்லூரிகளில் சேருவதற்கான JEE நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் முக்கிய கல்வி மையங்களில் ஒன்றான NIT கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிப்பதற்கு தனியாக JEE எனப்படும் ஒன்றை எழுதி அதில் தேர்ச்சி பெற வேண்டும். அதில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் அவர்களுக்கான கல்லூரிகளை தேர்ந்தெடுத்துகொள்ளலாம்.
அதன்படி, JEE தேர்வானது இரண்டு விதமாக நடத்தப்படும். முதல் பிரிவில் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத்தேர்வும், இன்னோர் பிரிவில் ஆர்க்கிடெக்சர் படிப்புகளில் சேருவதற்கு நுழைவு தேர்வு நடத்தப்படும்.
இந்த JEE தேர்வுகள் ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதம் ஆகிய மாதங்களில் நடத்தப்பட்டன. அதன் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. JEE தேர்வு எழுதிய மாணவர்கள் jeemain.nta.nic.in இந்த தளத்திற்கு சென்று தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவை குறிப்பிட்டு தங்கள் மதிப்பெண்களை அறிந்து கொள்ளலாம்.
JEE தேர்வில் தகுதி பெற்றவர்கள் அடுத்ததாக கல்லூரியை தேர்ந்தெடுக்கும் கவுன்சிலிங்கில் பங்கேற்க வேண்டும். ஆன்லைன் கவுன்சிலிங்கின் போது அவர்கள் விரும்பும் கல்லூரிகளை தேர்வு செய்து சமர்ப்பிக்க வேண்டும். பின்னர் நுழைவுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களுக்கான கல்லூரி ஒதுக்கப்படும்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…