நிதிஷ் குமார்: நேற்று வெளியான மக்களவை தேர்தல் முடிவுகள் நாட்டில் பல்வேறு பரபரப்பான அரசியல் களத்தை உருவாகியுள்ளன. எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததால் கூட்டணி குறித்த பல்வேறு தகவல்கள் தொடர்ந்து வெளியாகி கொண்டே இருகின்றன.
இன்று பாஜக தலைமையிலான NDA கூட்டணியும், காங்கிரஸ் அங்கம் வகிக்கும் I.N.D.I.A கூட்டணியும் டெல்லியில் ஆலோசனை நடத்துகின்றனர். அதில் கலந்து கொள்ள பிரதான கட்சிகள் டெல்லிக்கு விரைந்துள்ளன.
முன்னதாக, டெல்லி செல்வதற்கு முன்னர் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, தான் பாஜக கூட்டணியில் தான் தொடர்கிறேன் என திட்டவட்டமாக கூறிச்சென்றார். ஆனால் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் இன்னும் தனது நிலைப்பாட்டை தெளிவாக வெளியில் கூறவில்லை. மேலும், இன்று இந்தியா கூட்டணியில் உள்ள RJD தலைவர் தேஜஸ்வி யாதவ், நிதிஷ்குமார் ஆகிய இருவரும் ஒன்றாக விமானத்தில் பயணித்தனர். இதுவும் பல்வேறு கேள்விகளை எழுப்பியது.
இந்நிலையில் JDU மூத்த தலைவர் கே.சி.தியாகி ANI சேத்தியாளர்களிடம் கூறுகையில், கூட்டணி குறித்து வரும் செய்திகள் வெறும் வதந்திகள். நாங்கள் பாஜக தலைமையிலான NDAவில் ஒரு அங்கமாக இருக்கிறோம். நாங்கள் பிரதமர் மோடியின் தலைமையில் தேர்தலில் போட்டியிட்டோம். நிதிஷ் குமார் தற்போது டெல்லியில் இருக்கிறார். அதில் JD(U) தங்கள் ஆதரவு கடிதத்தை சமர்ப்பிப்பார். நரேந்திர மோடியை பிரதமராக முன்மொழிவார் என JDU மூத்த தலைவர் கே.சி.தியாகி கூறினார்.
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…
ஒடிசா : இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி தங்களது சொந்த மண்ணில் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட…