JDS MP Prajwal Revanna [File Image]
Prajwal Revanna : பாலியல் புகார் விசாரணை முடியும் வரையில் மஜத எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடகாவின் ஹாசன் தொகுதி எம்.பியாக இருப்பவர் பிரஜ்வல் ரேவண்ணா. மதசார்பற்ற ஜனதா தளம் (JDS) கட்சியை சேர்ந்த இவர் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன், முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமின் அண்ணன் மகன் ஆவார்.
அண்மையில், பிரஜ்வால் ரேவண்ணா இருக்குப்படியான பாலியல் வீடியோ ஒன்று வெளியாகி கர்நாடகா அரசியலில் பெரும் புயலை கிளப்பியது. மேலும், பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண் அளித்த புகாரின் பெயரில் பிரஜ்வல் ரேவண்ணா மீதும், முன்னாள் அமைச்சர் ரேவண்ணா மீதும் ஹாசன் பகுதி காவல்நிலையத்தில் புகார் பதியப்பட்டுள்ளது.
கர்நாடக அரசியலில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி, பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து வருகிறது. ஹாசன் தொகுதியில் மஜத சார்பில் மீண்டும் பிரஜ்வல் ரேவண்ணா தான் போட்டியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படியான சமயத்தில் தற்போது இந்த வழக்கை, சிறப்பு புலனாய்வு குழு (எஸ்.ஐ.டி) விசாரணை செய்து வருகிறது. பிரஜ்வல் ரேவான்னா மீது கட்சி ரீதியிலான நடவடிக்கை எடுக்க கோரி கோரிக்கைகள் வலுத்த நிலையில், இன்று தேவகவுடா தலைமையில் கட்சி ஒழுங்குமுறை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அந்த கூட்டத்தின் முடிவில், பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிரான எஸ்ஐடி விசாரணையை நாங்கள் (JDS ) வரவேற்கிறோம் என்றும், எஸ்ஐடி விசாரணை முடியும் வரை பிரஜ்வல் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்ய எங்கள் கட்சியின் தேசிய தலைவருக்கு பரிந்துரை செய்துள்ளோம் என மஜக கமிட்டி தலைவர் தேவேகவுடா கூறினார்.
மஜத கட்சித் தலைவர் ஹெச்.டி.குமாரசாமி இது குறித்து கூறுகையில், சிறப்பு விசாரணை குழுவின் விசாரணை முடியும் வரை பிரஜ்வல் ரேவண்ணா மஜக கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவித்தார்.
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தில் பெரும் கனவுடன் அரசியல் வாழ்க்கையை தொடங்கிய சஜி, மாரடைப்பால் மறைந்தது அக்கட்சியினரை சோகத்தில்…
சென்னை : நடிகர் சிம்பு வெந்து தணிந்தது காடு படத்தை தொடர்ந்து அடுத்ததாக எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை இருந்தாலும் அவருக்கு…
சென்னை : நேற்று தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் 2025 - 2026 தாக்கல் செய்யப்பட்டது. அதனை அடுத்து இன்று வேளாண்…
சென்னை : தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2025 2026-ஐ வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதில்…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக வேளாண் பட்ஜெட் 2025 – 2026-ஐ தாக்கல் செய்தார். கரும்பு சாகுபடிக்கு…