டெல்லியில் ஹோலி கொண்டாட்டத்தின் போது 22 வயதான ஜப்பானிய பெண், ஆண்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளார்.
டெல்லியில் ஜப்பான் சுற்றுலாப் பயணியான 22 வயது பெண் ஒருவர் ஹோலி பண்டிகை அன்று, கொண்டாட்டத்தின் போது சில நபர்களால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளார், இதனையடுத்து அந்த ஜப்பான் பெண், தான் பங்களாதேஷ் வந்துள்ளதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
மேலும் தான் தற்பொழுது உடல் மற்றும் மன ரீதியாக நன்றாக இருக்கிறேன், இது ஒரு தீவிரமான சூழ்நிலை என்பதை எனக்குத் தெரியாததற்கு நான் மிகவும் வருந்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார். இதனையடுத்து அந்த நபர்கள் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து கூறிய டெல்லி போலீசார், ஜப்பான் சுற்றுலா பயணி தரப்பில் இதுவரை எந்த புகாரும் தெரிவிக்கப்படவில்லை. மேலும் அந்த பெண் குறித்த விவரங்களுக்கு, ஜப்பான் தூதரகத்திற்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளதாகவும், பஹார் கஞ்ச் பகுதியைச் சேர்ந்த வாலிபர் உட்பட 3 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர், மேலும் சட்டப்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறியுள்ளனர்.
சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வின் போது மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்…
சான் பிரான்சிஸ்கோ : ஏர்டெல் நிறுவனம், எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவையை இந்தியாவில்…
சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய வடகிழக்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை இன்று…
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சித் தலைவர் விஜய்க்கு மத்திய உள்துறை அமைச்சகம் Y பிரிவு பாதுகாப்பை வழங்குவதாக…
கோவை : அண்மைக்காலமாக தெருநாய் கடிபற்றிய செய்திகள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தெரு நாய்களை கட்டுப்படுத்த அரசு போதிய நடவடிக்கை…