காஷ்மீரில் 407 நாட்கள் வீட்டுச்சிறையில் இருந்த நயீம் அக்தர் தான் விடுதலை….

Published by
Kaliraj
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கான  சிறப்பு அந்தஸ்துமத்திய அரசு ரத்து செய்யப்பட்டு  மேலும், அப்பகுதியை ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இந்த அதிரடி நடவடிக்கையின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டனர். மேலும், முன்னாள் முதலமைச்சர்கள் மற்றும் முக்கிய அரசியல் தலைவர்கள் உள்பட பலர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். இந்நிலையில் தற்போது காஷ்மீரில் நிலைமை சீரடைந்ததையடுத்துவருகிறது. எனவே  வீட்டுக்காவலில் இருந்த பலரும் விடுதலை செய்யப்பட்டு வந்தனர். ஆனால், முன்னாள் முதலமைச்சர்  பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா மற்றும்  மெகபூபா முப்தி ஆகியோரும், மற்றும் மக்கள் ஜனநாயக கட்சியின் மூத்த தலைவர்கள் சிலரும் இன்னும் வீட்டுக்காவலிலேயே உள்ளனர். இந்நிலையில், தற்போது ஜம்மு & காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து  சட்டம் ரத்து செய்யப்பட்டபோது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டுக்காவலில் வைக்கப்பட்டவர்களில் ஒருவரான மக்கள் ஜனநாயக கட்சியின் மூத்த தலைவரான நயீம் அக்தர் தற்போது  விடுதலை செய்யப்பட்டுள்ளார். இவர் கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் கிட்டத்தட்ட 407 நாட்கள் வீடுக்காவலில் வைக்கப்பட்டிருந்த நயீம் அக்தர் தான் நேற்று விடுதலையானதாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Published by
Kaliraj

Recent Posts

“மொழிகளைத் தாண்டி திரைப்படங்களை பார்க்க தொழில்நுட்பம் உதவியாக உள்ளது” – பவன் கல்யாணுக்கு கனிமொழி பதிலடி.!

“மொழிகளைத் தாண்டி திரைப்படங்களை பார்க்க தொழில்நுட்பம் உதவியாக உள்ளது” – பவன் கல்யாணுக்கு கனிமொழி பதிலடி.!

சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…

4 minutes ago

தவெக திருநெல்வேலி கிழக்கு மாவட்ட செயலாளர் சஜி காலமானார் – விஜய் இரங்கல்.!

சென்னை : தமிழக வெற்றி கழகத்தில் பெரும் கனவுடன் அரசியல் வாழ்க்கையை தொடங்கிய சஜி, மாரடைப்பால் மறைந்தது அக்கட்சியினரை சோகத்தில்…

44 minutes ago

எப்படி கண்ணா இது? சிம்பு குறித்து பேசிய ரஜினிகாந்த்!

சென்னை : நடிகர் சிம்பு வெந்து தணிந்தது காடு படத்தை தொடர்ந்து அடுத்ததாக எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை இருந்தாலும் அவருக்கு…

2 hours ago

செங்கோட்டையன் விவகாரம் : “யாரும் எங்கும் போகலாம்..,” கடுப்பான இபிஎஸ்!

சென்னை : நேற்று தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் 2025 - 2026 தாக்கல் செய்யப்பட்டது. அதனை அடுத்து இன்று வேளாண்…

2 hours ago

தமிழக வேளாண் பட்ஜெட் 2025 – 2026 : வெளியான முக்கிய அறிவிப்புகள் இதோ….

சென்னை : தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2025 2026-ஐ வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதில்…

3 hours ago

விவசாயிகளை ஏமாற்றுவதில் திமுக வல்லவர்கள்…பட்ஜெட்டில் ஒன்னு இல்லை..இபிஎஸ் காட்டம்!

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக வேளாண் பட்ஜெட் 2025 – 2026-ஐ தாக்கல் செய்தார். கரும்பு சாகுபடிக்கு…

3 hours ago