லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பை சேர்ந்த 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரின் தெற்கு ஷோபியான் மாவட்டம் புட்காம் கிராமம், பீர்வாவில் பகுதியில், தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக நேற்று இரவு பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து மாநில போலீஸ், ராணுவம் மற்றும் சிஆர்பிஎஃப் வீரர்கள் அடங்கிய குழு அப்பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தீவிரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினர் மீது திடீரென்று துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் இரு தரப்புக்கும் இடையில் மோதல் வெடித்து நிலையில், இந்த சம்பவத்தில் பாதுகாப்பு படையை சேர்ந்த சிறப்பு போலீஸ் அதிகாரி ஒருவர் வீரமரணம் அடைந்துள்ளார். மேலும் இந்த தாக்குதலில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பை சேர்ந்த 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடம் இருந்து துப்பாக்கிகள், வெடிமருந்துகள், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியில் நாளை நடைபெறவிருக்கும் அரையிறுதி போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த இரு அணிகளும் நாளை…
சென்னை : வருகின்ற மார்ச் 7ஆம் தேதி தவெக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ராயப்பேட்டை ஒய்எம்சிஏ…
சென்னை : கொடுக்கப்படும் பட்ஜெட்டில் எந்த அளவுக்கு தரமான படத்தை கொடுத்து மக்களை கவர்ந்து அந்த படத்தினை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதிப் போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை (மார்ச் 4 ஆம்…
கொல்கத்தா : கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி வெற்றிபெற்று கோப்பையை வென்றது. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில்…
நாகப்பட்டினம் : நாகையில் ரூ.82.99 கோடி மதிப்பிலான 206 புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பல்வேறு துறைகள்…