ஜம்மு-காஷ்மீர் அரசியலில் திடீர் திருப்பம்….!சட்டமன்றத்தை கலைத்தார் ஆளுநர்…!

Default Image

ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தை கலைத்து ஆளுநர் சத்யபால் மாலிக்  உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில்  87 தொகுதிகள் கொண்ட ஜம்மு காஷ்மீர் மாநில சட்டப்பேரவைக்கு கடந்த 2016-ம் ஆண்டு நடந்த தேர்தல் நடந்தது.

Image result for மெகபூபா முஃப்தி

இதில் மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு 28 இடங்கும், பாஜகவுக்கு 25 இடங்களும், தேசிய மாநாட்டுக் கட்சிக்கு 15 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு 12 இடங்களும், சுயேட்சைக்கு 7 இடங்களும் கிடைத்தன. 87 எம்எல்ஏ.க்கள் கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 44 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை என்ற நிலையில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

இந்நிலையில் பலதரப்பட்ட பேச்சுக்குப்பின் பாஜக – மெஹ்பூபா தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சி கூட்டணி ஆட்சிக்கு வந்தது.இம்ஹ்ம்ஹிலையில் திடீரென பா.ஜ.க. தனது ஆதரவை விலக்கிக்கொண்டது. கொள்கை அளவில் வெவ்வேறு துருவங்களாக இருந்த இரு கட்சிகளும் 26 மாதங்கள் சேர்ந்து ஆட்சியில் இருந்ததே மிகப்பெரிய சாதனை என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் மெகபூபா முப்தியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்தது.

Image result for சத்யபால் மாலிக் 

 

இந்த கூட்டணிக்கு பரூக் அப்துல்லா தலைமையிலான தேசிய கூட்டணி வெளியில் இருந்து ஆதரவு அளிக்க முடிவு செய்தது. 3 கட்சி தலைவர்களும் ஆளுநரை சந்தித்து இன்று ஆட்சியமைக்க உரிமை கோர முடிவு செய்யப்பட்து .இன்று ஜம்மு-காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சியின் மெஹபூபா முப்தி காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் , ஆதரவுடன் ஆட்சியமைக்க உரிமை கோரி ஆளுநருக்கு கடிதம் அனுப்பினார்.பின்  ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினார் பிடிபி கட்சி தலைவர் மெகபூபா முஃப்தி.

 

இந்நிலையில் பிடிபி கட்சி தலைவர் மெகபூபா முஃப்தி ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமை கோரிய நிலையில் ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தை கலைத்து ஆளுநர் சத்யபால் மாலிக்  உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்